ஐங்குறுநூறு - 16. வெள்ளங் குருகுப் பத்து
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை பதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவி தெள்கழிப் பரக்கும் துரைவன் எனக்கோ காதலன் அனைக்கோ வேறே. | 156 |
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை காலை யிருந்து மாலைச் சேக்கும் தெண்கடல் சேர்ப்பனொடு வாரான் தான்வந் தனன்எம் காத லோனே. | 157 |
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை கானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும் தண்ணந் துறைவன் கண்டிக்கும் அம்மா மேனிஎம் தோழியது துயரே. | 158 |
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை பசிதின அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப நின்ஒன்று இரக்குவன் அல்லேன் தந்தனை சென்மோ கொண்டஇவள் நலனே. | 159 |
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை நொந்ததன் தலையும் நோய்மிகும் துறைவ பண்டையின் மிகப்பெரிது இனைஇ முயங்குமதி பெரும மய்ங்கினள் பெரிதே. | 160 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 16. வெள்ளங் குருகுப் பத்து, செத்தெனக், பிள்ளை, காணிய, சென்ற, நாரை, மடநடை, குருகின், வெள்ளாங்க், இலக்கியங்கள், ஐங்குறுநூறு, வெள்ளங், குருகுப், பத்து, எட்டுத்தொகை, சங்க