ஐங்குறுநூறு - 15. ஞாழற் பத்து
எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழிணர் நறிய கமழும் துறைவற்கு இனிய மன்றஎன் மாமைக் கவினே. | 146 |
எக்கர் ஞாழல் மலரின் மகளிர் ஒள்தழை அயரும் துறைவன் தண்தழை விலையென நல்கினன் நாடே. | 147 |
எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை வீஇனிது கமழும் துறைவனை நீயினிது முயங்குதி காத லோயே. | 148 |
எக்கர் ஞாழல் பூவின் அன்ன சுணங்குவளர் இளமுலை மடந்தைக்கு அணங்குவளர்த்து அகறல் வல்லா தீமோ. | 149 |
எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப் புணரி திளைக்கும் துறைவன் புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே. | 150 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 15. ஞாழற் பத்து, ஞாழல், எக்கர், இலக்கியங்கள், ஞாழற், ஐங்குறுநூறு, பத்து, துறைவன், கமழும், சங்க, எட்டுத்தொகை