9. உள்ளுணர்வு - ஞானக் குறள்
எண்ணிலியூழி தவஞ் செய்திங் கீசனை உண்ணிலைமை பெற்ற துணர்வு. |
81 |
பல்லூழி காலம் பயின்றனை யர்ச்சித்து நல்லுணர்வு பெற்ற நலம். |
82 |
எண்ணற்கரிய வருந்தவத்தா லன்றே நண்ணப் படுமுணர்வு தான். |
83 |
முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால் பின்னைப் பெறுமுணர்வு தான். |
84 |
காயக்கிலேச முணர்ந்த பயனன்றே ஓயா வுணர்வு பெறல். |
85 |
பண்டைப்பிறவிப் பயனாந் தவத்தினால் கண்டங் குணர்வு பெறல். |
86 |
பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை ஆராய்ந் துணர்வு பெறின். |
87 |
ஞானத்தாலாய வுடம்பின் பயனன்றே மோனத்தா லாய வுணர்வு. |
88 |
ஆதியோடொன்று மறிவைப் பெறுவதுதான் நீதியாற் செய்த தவம். |
89 |
காடு மலையுங் கருதித்தவஞ் செய்தால் கூடு முணர்வின் பயன். |
90 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
9. உள்ளுணர்வு - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - வுணர்வு, பெறல், பயனன்றே, தவத்தினால், துணர்வு, தான், பெற்ற