4. நாடி தாரணை - ஞானக் குறள்
3எழுபத் தீராயிர நாடி யவற்றுள் முழுபத்து நாடி முதல். |
31 |
3நரம்பெனு நாடியிவை யினுக்கெல்லா முரம்பெறு நாடியொன் றுண்டு. |
32 |
3உந்திமுதலா யுறுமுடிகீழ் மேலாய்ப் பந்தித்து நிற்கும் பரிந்து. |
33 |
3காலொடு கையி னடுவிடத் தாமரை நூல்போலு நாடி நுழைந்து. |
34 |
3ஆதித்தன்றன் கதிர்போல வந்நாடிகள் பேதித்துத் தாம்பரந்த வாறு. |
35 |
3மெய்யெல்லாமாகி நரம்போ டெலும்பிசைந்து பொய்யில்லை நாடிப் புணர்வு. |
36 |
3உந்திமுதலாகி யோங்காரத்துட் பொருளாய் நின்றது நாடி நிலை. |
37 |
3 நாடிகளூடு போய்ப் புக்க நலஞ்சுடர்தான் வீடு தருமாம் விரைந்து. |
38 |
3நாடி வழக்கமறிந்து செறிந்தடங்கி நீடொளி காண்ப தறிவு. |
39 |
அறிந்தடங்கி நிற்குமந் நாடிகடோறுஞ் செறிந்தடங்கி நிற்குஞ் சிவம். |
40 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4. நாடி தாரணை - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - நாடி, செறிந்தடங்கி