22. அங்கியில் பஞ்சு - ஞானக் குறள்
அங்கியிற் பஞ்சுபோ லாகாயத் தேநினையில் சங்கிக்க வேண்டாஞ் சிவம். |
211 |
மெய்ப்பா லறியாத மூடர்த நெஞ்சத்தின் அப்பால தாகுஞ் சிவம். |
212 |
நெஞ்சகத்து ணோக்கி நினைப்பவர்க் கல்லாஅல் அஞ்சலென் னாது சிவம். |
213 |
பற்றிலா தொன்றினைப் பற்றினா லல்லது கற்றதனா லென்ன பயன். |
214 |
தம்மை யறிவாரைத் தாமறிந்து கொண்டபின் தம்மை யறிவரோ தான். |
215 |
அசபை யறிந்துள்ளே யழலெழ நோக்கில் இசையாது மண்ணிற் பிறப்பு. |
216 |
இமையாத நாட்டத் திருந்துணர் வாருக் கமையாத வானந்த மாம். |
217 |
துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால் மரணம் பிறப்பில்லை வீடு. |
218 |
மதிபோ லுடம்பினை மாசற நோக்கில் விதிபோ யகல விடும். |
219 |
சீவன் சிவலிங்க மாகத் தெளிந்தவர்தம் பாவ நசிக்கும் பரிந்து. |
220 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
22. அங்கியில் பஞ்சு - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - சிவம், நோக்கில், தம்மை