2. உடம்பின் பயன் - ஞானக் குறள்
உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா முடம்பினி லுத்தமனைக் காண். |
11 |
உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே யுணர்க உணர்வு டையார். |
12 |
ஒருபய னாவ துடம்பின் பயனே தருபயனாஞ் சங்கரனைச் சார். |
13 |
பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந் துறப்பதாந் தூநெறிக்கட் சென்று. |
14 |
உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை யுடம்பினா லுன்னிய தேயாம். |
15 |
மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால் ஈசனைக் காட்டு முடம்பு. |
16 |
ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும் நேசத்தா லாய வுடம்பு. |
17 |
உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே அயிர்ப்பின்றி யாதியை நாடு. |
18 |
உடம்பினாற் பெற்ற பயனாவ வெல்லாம் திடம்பட வீசனைத் தேடு. |
19 |
அன்னத்தா லாய உடம்பின் பயனெல்லா முன்னோனைக் காட்டி விடும். |
20 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
2. உடம்பின் பயன் - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - பயனே, பயனாவ, பெற்ற, முடம்பின்