1.மோட்சம் செல்லும் வழி - ஞானக் குறள்
ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத் தோதிய நூலின் பயன். |
1 |
பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந் தரமாறிற் றோன்றும் பிறப்பு. |
2 |
ஓசை பரிசமுருவஞ் சுவை நாற்ற மாசை படுத்து மளறு. |
3 |
தருமம் பொருள் காமம்வீடெனு நான்கு முருவத்தா லாய பயன். |
4 |
நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே யுலவை யிறண்டொன் றுவிண். |
5 |
மாயன் பிரமனு ருத்திரன் மகேசனோ டாயுஞ்சிவ மூர்த்தி யைந்து. |
6 |
மாலய னங்கி யிரவிமதி யுமையோ டேலும் திகழ்சத்தி யாறு. |
7 |
தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு சுக்கிலந் தாதுக்க ளேழு. |
8 |
மண்ணோடு நீரங்கி மதுயொடு காற்றிரவி விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு. |
9 |
இவையெல் லாங்கூடி யுடம்பாய வொன்றி னவையெல்லா மானது விந்து. |
10 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1.மோட்சம் செல்லும் வழி - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - நான்கு, பயன்