ஆத்திசூடி - அவ்வையார் நூல்கள்

நகர வருக்கம்
| 66. நன்மை கடைப்பிடி |
நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்.
| 67. நாடு ஒப்பன செய் |
நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்.
| 68. நிலையில் பிரியேல் |
உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
| 69. நீர் விளையாடேல் |
வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே.
| 70. நுண்மை நுகரேல் |
நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே.
| 71. நூல் பல கல் |
அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி.
| 72. நெல் பயிர் விளை |
நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.
| 73. நேர்பட ஒழுகு |
ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட.
| 74. நைவினை நணுகேல் |
பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே.
| 75. நொய்ய உரையேல் |
பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.
| 76. நோய்க்கு இடம் கொடேல் |
மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆத்திசூடி - அவ்வையார் நூல்கள், நூல்கள், அவ்வையார், ஆத்திசூடி, | , இலக்கியங்கள்