பாடல் 82 - புலிப்பாணி ஜோதிடம் 300
சொல்லுகிறேன் இருநாலில் செவ்வாய்தோன்ற |
இன்னுமொன்றையும் கூறுகிறேன் கேட்பாயாக! இலக்கினத்திற்கு எட்டில் செவ்வாய் நிற்க சூரியனோடு பாம்பும் சேர்ந்துநிற்க அச்சென்மன விஷம் தீண்டலால் உயிரிழப்பான். அவனுக்குக் களத்திரத்தாலும் துன்பமே. இன்னம் மெத்தவும் நல்லவனான இலக்கினாதிபதிக்கு ஆறாம் இடத்திற்குடையவன் நஞ்சுண்டு கரும்பாம்பான இராகுவுடன் கூடினாலும் மருந்தால் அச்சாதகனுக்குக் கண்டம் என்று கூறுவாயாக! இதனைப் போகமா முனிவர்¢ன் அருளாணையால் புலிப்பாணி நவின்றிட்டேன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 82 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology