பாடல் 58 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா பனிரெண்டில் மதியும்நிற்கப்பகருகின்ற பவுமனுமே மதிக்குயெட்டில்சீரப்பா செவ்வாய்க்கு யெட்டிதீயர்சிவசிவா சென்மனுமோ அன்னியபீசம்ஆரப்பா அயன்விதியை அரையலாமோஅப்பனே அனலனொடு குளிகன் சேர்ந்துகூறப்பா குடியிருக்க அட்டமத்தில்கொற்றவனே அவைபோலே கூறுவாயே. |
இன்னொரு சேதியையும் நீ கேட்பாயாக! 2ஆம் இடத்தில் சந்திரன் நிற்க மதிக்கு எட்டில் அந்த செவ்வாய் நிற்க அச் செவ்வாய்க்கு எட்டில் தீக்கோள்கள் நிற்பினும் சிவபரம் பொருளின் பேரருட் கருணையால் அச்சாதகன் அன்னியபீசம் என்றே கூறுக. அதேபோல் பிரமன் படைப்பின் விந்தை இன்னுமொன்றுளது. சூரியனோடு குளிகனும் இலக்கினத்திற்கு அட்டமத்தில் கூட அச்சாதகன் அன்னிய பீசமே என்று கூறுக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 58 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், பாடல், புலிப்பாணி, அச்சாதகன், கூறுக, எட்டில், செவ்வாய்க்கு, astrology, நிற்க