பாடல் 50 - சனி 9,6,11,3,10 ல் தரும் யோகம் - புலிப்பாணி ஜோதிடம் 300
கனமுள்ள நவமாறு லாபம் மூன்று |
பெருமைக்குரிய 9,6,11,3 ஆகிய இடங்களில் சூரிய குமாரனான மந்தன் என்ற சனிபகவான் நிற்க அச்சாதகனுக்கு ஆயுள் தீர்க்கம். நிறை தனமுடையவர். அதே போல் பிதுர் தோஷமும் உடைய அச்சாதகன் சத்துரு பங்கனாகவும் இருப்பான். பூமியில் அவனது புகழ் விளங்கிக் காணும். அரச லாபம் பெறுவான். இனி, சனிபகவான் 10இல் நிற்க அச்சாதகன் நன்மையான பலன்களையே அடைவான். வாகன யோகம் உடையவனாகவும், செய் தொழில் கீர்த்தி உடையவனாகவும் விளங்குவான். இதையெல்லாம் உணராது உணர்ந்தார் உள்ள சபையில் பிணம் போலப் பேசாமல் இராதே. நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டுக் கூறுவாயேல் நீ புவியில் என்னூலைப் போற்றுவாய்.
இப்பாடலில் சனி இலக்கினத்திலிருந்து 9,6,11,3,10 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 50 - சனி 9,6,11,3,10 ல் தரும் யோகம் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், யோகம், புலிப்பாணி, பாடல், தரும், அச்சாதகன், நிற்க, சனிபகவான், உடையவனாகவும், லாபம், astrology, சபையில், ஆகிய, இடங்களில்