பாடல் 26 - சிம்ம இலக்கின ஜாதகர் - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா சிங்கத்தில் செனித்த பேர்க்கு |
சிம்மத்தில் பிறந்த அதாவது சிம்மலக்கின ஜாதகருக்கு செவ்வாய்க் கிரகமானது திரிகோண ஸ்தானத்தில் அமைந்தால் பெருஞ்சீர் வாய்க்கும்:
செம்பொன் சேரும், செல்வமும் பூமியும் வாய்க்கும். இவையும் சிவபரம்பொருளின் பேரருளேயாகும். ஆனால் அத்திரிகோண ஸ்தானம் தவிர வேறிடத்தில் அமர்ந்திருப்பின், அவனால் மிகுந்த துன்பமும் செய்வினை முதலிய துன்பங்கள் ஏற்படுதலும் உண்டாகும். எனது சற்குருவாகிய போக மகாமுனிவரின் பேரருளால் கூறினேன். இக்குறிப்பினை அறிந்து ஜாதகனுக்குப் பலன் கூறுவாயாக. [எ-று]
இப்பாடலில் சிம்ம இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 26 - சிம்ம இலக்கின ஜாதகர் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, சிம்ம, ஜாதகர், இலக்கின, பாடல், வாய்க்கும், பிறந்த, astrology, திரிகோண