பாடல் 215 - செவ்வாய் மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
ஆமென்ற சேய்திசை வருஷம் ஏழில் |
இனி, சேய் என்று அழைக்கப்படும் செவ்வாயின் தசையில் அக்கிரகத்திற்குரிய சுயபுத்தி 147 நாள்கள் ஆகும். இவனது பொசிப்புக் காலத்தில் ஏற்படும் பலன்களாவன: புகழ்மிக்க அரசர் பகை உளவாகும்; ஆயுதத்தாலும் பீடைகள் நேரும். நாகப்பாம்பினைப் போன்ற விடமுடைய சத்துருக்களால் வியாதியும் நேரும்; தன விரயம் ஏற்படும். உடல் சேதமும் உண்டாகும். சூனியம், பில்லி, போன்றவற்றால் துன்பங்கள் நேரும். நாடே தூற்றிப் பகையாகும் என்று போகரது அருளால் புலிப்பாணி பாடினேன்.
இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 215 - செவ்வாய் மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், செவ்வாய், புலிப்பாணி, நேரும், பலன்கள், பாடல், புத்திப், மகாதிசை, astrology, ஏற்படும்