பாடல் 192 - புலிப்பாணி ஜோதிடம் 300
போமப்பா யின்னமொரு புதுமைகேளு |
மேலும் ஒரு கருத்தைக் கூறுகிறேன். கவனமுடன் கேட்பாயாக! சந்திரனுக்குப் பத்தில் கோட்சாரத்தில் குருபகவான் வரும் காலத்தில் வினைவலியால் நிகழும் பலன்கள் கொடுமையானதேயாகும். சிவ பரம்பொருள் தெருதோறும் சென்று ஐயம் ஏற்று உண்டதும் உத்தமனான புரூரவசுவின் தலையறுபட்டதும் இதனாலன்றோ? வேந்தன் என்ற குருபகவான் நின்ற ராசியினை நன்கு அறிந்து பலன் நிகழ்த்துக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 192 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், குருபகவான், astrology