பாடல் 19 - பத்தாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300
பத்தாகு மிடத்தினது பலனைக்கேளு |
பத்தாம் பாவகத்தின் பலன்களாவன: பட்டினங்கள் ஸ்தாபித்தலும், நல்லூழோடு பல புண்ணியம் செய்தலும் தேசாபிமானமும், அரசரோடு இணக்கமுறுதலும் நற்கருமம் ஞானம் முதலிய வாய்த்தலும், மனத்தில் இரக்க உணவு இழையோடுதலும் மிகுந்த தெய்வ பக்தியும் சிறந்த செளகரியமும் கருப்பம் வாய்த்தலும் நல்ல உணவு வாய்த்தலும் வெகுவான பூசைகளைச் செய்வதோடு துணைவி சேர்க்கையும் நலமாகக் குறித்தறிந்து கூறுவாய். [எ-று]
இப்பாடலில் பத்தாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 19 - பத்தாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், பத்தாம், புலிப்பாணி, வாய்த்தலும், பாடல், பாவம், உணவு, astrology