பாடல் 160 - புலிப்பாணி ஜோதிடம் 300
காணப்பா கதிரவனும் மதியுங்கூடிகனமுள்ள லெக்கினத்தை கண்னால் நோக்கசீனப்பா சக்கிலியப்பெண்ணை ஜென்மன்சிறப்பாகச் சேர்ந்தணைவன் ஜெகத்திலேதான்ஊணப்பா உதையவனும் கண்ணுற்றாலும்உத்தமனே உலகத்தில் ஒருவர்பாரார்வீணப்பா போகருட கடாட்சத்தாலேவிதமாகப் புலிபாணி விளம்பினேனே. |
வேறொரு விஷயத்தையும் நீ நோக்குக. சூரியனும் சந்திரனும் கூடி நின்று பெருமைமிக்க இலக்கினத்தைக் கண்ணால் நோக்க அச்சாதகன் சக்கிலியப் பெண்ணைச் சிறப்பாகச் சேர்ந்து சுகித்து இப்பூமியில் வாழ்வான். ஆனால் சூரியன் மட்டும் பார்ப்பின் உத்தம குணம் உள்ளவனே. அவனை ஒருவர்கூட ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள் என்பதனையும் போகரின் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 160 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology