பாடல் 148 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா பனிரெண்டு ஜென்மம் ரெண்டில்
|
வேறொன்றையும் கூறுகிறேன் கேட்பாயாக! இலக்கினத்திற்கு 12, ஜன்மம் (1),2 ஆகிய இட்ங்களில் பிரசித்தமுள்ள முடவன் என்னும் சனிபகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தை ஏழரை நாட்டுச் சனியின் காலம் என்பர். இவ்வேளையில் சாதகனுக்கு தலைவலியும் அம்மை, பேதி என்று கூறும் கொள்ளை நோயும் ஜலபயமும், பெரும் பொருட்சேதமும் ஏற்படும். குடும்பத்தில் களவுபோதலும், உண்டாம். இக்காலகட்டத்தில் இவன் பல பேர்க்கும் கொடியவனாக விளங்குவான் என்று போகர் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 148 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், குடும்பத்தில், astrology