பாடல் 146 - புலிப்பாணி ஜோதிடம் 300
செப்புவாய் குருவோடு வெள்ளிகுடில் |
மேலும் ஒரு கருத்தையும் கூறுவேன் கேட்பாயாக! தேவகுருவோடு அசுரகுரு கூடினால் அச்சென்மனுக்கு யோகமே விளையும், அவன் பொன்னுள்ளவன் எனக் கூறுக. அதே போல் குருவோடு சனி கூடினால் அச்சாதகன் ஈன புத்திரர்களை அடைவான். இலக்கினத்தில் சனி பாம்புடன் கூடி நிற்க அச்சாதகனுக்கு நோயேயென்றும் காத்திருக்கும். அதேபோல் இலக்கினத்தில் புதனோடு சனி சேர இப்பூமியின் கண் அச்சாதகன் கூனன் என்பதனையும் அறிந்து தெளிவாயாக என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 146 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், இலக்கினத்தில், அச்சாதகன், astrology, குருவோடு, கூடினால்