ஆரூடப் பாடல் 57 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௫௭. (57) வந்தால்..
ஆறிலே சூரியனு மிருப்பதாலே அனுகூல மாகுமப்பா உனது எண்ணம் போரிலே நின்றாலும் ஜெயமே யுண்டு போன பொருள் தவணையின்றி வந்து சேரும் கோரிய வியாபாரம் லாபங்காணும் கோவுடனே மனைகோல பாக்ய மண்டாகும் பாரிலே பதிமூன்று நாட்குபின்னே பலவிதத்தில் சந்தோச மடைகுவாயே. |
ஆரூடத்தில் ஐம்பத்தி ஏழு வந்திருப்பது, ஆறாம் இடத்தில் சூரியன் வந்திருப்பதைக் குறிக்கும். உன் எண்ணம் எல்லாம் நினைத்தபடியே நடக்கும். போருக்கு சென்றாலும் வெற்றியே கிடைக்கும். கைவிட்டு போன பொருட்கள் முழுமையாக வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பசுமாடுகள் வாங்கவும் வீடு கட்டவும் வாய்ப்புக் கிடைக்கும். இன்னும் பதின் மூன்று நாட்களுக்குப் பின் பல வழிகளிலும் உனக்கு சந்தோசம் கிட்டும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 57 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், கிடைக்கும், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், சேரும், horary, எண்ணம், வந்து