ஆரூடப் பாடல் 56 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௫௬. (56) வந்தால்..
எண்ணிய எண்ணமெல்லாம் பலிக்குமப்பா எத்தொழிலை செய்தாலும் லாபமப்பா உன்மனதின் கவலையெல்லாம் தீருமப்பா உடன் பிறந்தோர் பந்துக்களால் உதவியப்பா வண்ணபகை யாள ருறவாவாரப்பா வந்தநோய் வழிவிலகி நிற்குமப்பா நன்மையுடன் பலபொருளும் சேருமப்பா நாற்பத்தி ரெண்ட நாளில் நலமுண்டாமே. |
ஆரூடத்தில் ஐம்பத்தி ஆறு வந்திருப்பதால், எண்ணிய எண்ணமெல்லாம் பலிக்கும். எந்தத் தொழிலை செய்தாலும் லாபமே கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் எல்லாம் இனி தீரும். சகோதரர்கள், உறவினர்கள் எல்லோரும் உதவுவார்கள். பகையாளிகளும் பகையை விட்டு ஒன்று சேர்வார்கள். நன்மையான பல பொருட்கள் சேரும். உன்னை வருத்தும் நோய் விலகும். அத்துடன் இன்னும் நாற்பத்தியிரண்டு நாளில் பல பொருட்கள் சேர்வதுடன் நன்மைகளும் நடக்கும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 56 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடப், ஜோதிடம், சக்கரம், ஆரூடங்கள், ஆரூடச், பாடல், ஸ்ரீஅகத்தியர், நாளில், பொருட்கள், செய்தாலும், எண்ணிய, horary, எண்ணமெல்லாம்