ஆரூடப் பாடல் 55 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௫௫. (55) வந்தால்..
இரண்டிலே சந்திரனும் மிருக்க தீதாம் இன்பமுடன் மணமாலை சூட்ட தீதாம் விரையமுண்டு மாடுமனை வாங்க தீதாம் வெளுயூருக்கு சென்றாலும் மிகவும் தீதாம் தரணிதனில் கொடுத்த கடன் கேட்க தீதாம் தத்துவமாய் வியாபாரம் செய்ய தீதாம் உரமான சினேகிதரால் உனக்கே தீதாம் உத்தமனே வாரமைந்து கழித்திடாயே. |
ஆரூடத்தில் ஐம்பத்தி ஐந்து வந்திருப்பது, இரண்டாம் இடத்தில் சந்திரன் வந்திருப்பதைக் குறிக்கும். இதனால் நன்மை நடக்காது. திருமணம் செய்யவும், புது வீடு, கால் நடைகள் வாங்கவும் இந்த காலகட்டம் நல்லதல்ல. வெளியூருக்கு செல்வதும் தீமையை கொடுக்கும். கொடுத்த கடன் கேட்க சென்றாலும் தீமையே நடக்கும். வியாபாரமும் தீமையிலேயே முடியும். அன்புமிக்க நண்பர்களாலும் தீமையே நடக்கும்.ஆனாலும் ஐந்து வாரம் பொறுமையாக இருந்தால் அதன் பின் நன்மை கிடைக்கும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 55 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், தீதாம், ஜோதிடம், பாடல், ஆரூடங்கள், ஆரூடப், ஆரூடச், ஸ்ரீஅகத்தியர், சக்கரம், நன்மை, தீமையே, நடக்கும், ஐந்து, கொடுத்த, சென்றாலும், horary, கடன், கேட்க