ஆரூடப் பாடல் 49 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௪௯. (49) வந்தால்..
அப்பனெ வருடமென்றாய் கஷ்டப்பட்டாய் அதற்கு முன்னும் வெகுநாள் கவலையுற்றாய் செப்பவே மாதமொன்று சென்றதானால் சித்தத்தில் நினைத்த எண்ணம் ஜெயமேயாகும் தப்பாது உன்வாக்கு தொழிலுமோங்கு தனபாலம் மிகவுண்டு நலியம் நீங்கும் ஒவ்பில்லா மணங்கூடும் மகப்பேறாகும் உலகமதில் அகஸ்தீயனார் உரைத்தவாக்கு. |
ஆரூடத்தில் நாற்பத்தி ஒன்பது வந்திருப்பது, நீ ஒரு வருடமாக துன்பமும் அதற்கு முன்னரும் பல நாட்களாக கவலைகளையும் அடைந்ததைக் குறிக்கும். ஆனால் இந்த ஆரூடம் பார்த்த நாளில் இருந்து ஒரு மாதம் முடிந்தபின்னர், நினைத்த எண்ணம் எல்லாம் இனிதாக நிறைவேறும். உன் வாக்கு பிழைக்காது. தொழிலும் சிறப்பாக நடைபெறும். லாபம் அதிகரிக்கும். துன்பங்கள் விலகும். திருமண யோகம் கிட்டும். குழந்தை பேறும் உண்டாகும். இது உலகத்தவருக்கு அகத்தியர் சொல்லும் வாக்கு என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 49 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், வாக்கு, எண்ணம், horary, அதற்கு, நினைத்த