ஆரூடப் பாடல் 47 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௪௭. (47) வந்தால்..
கிரகத்தின் தோஷமெல்லா மொழிந்துபோச்சு கீர்த்தியுடன் எண்ணமது பலிதமாச்சு உரமிகுத்த பந்துக்களால் உதவியாச்சு உன்னுடைய வியாபாரம் லாபமாச்சு சிரமமிகம் நோய் விலகும் காலமாச்சு சிக்கனமாய் பிக்குகளும் ஒழியலாச்சு தரணிதன்னில் தழைத்தோங்கி வாழலாச்சு தாட்டிகமாய் நாளேழில் சுகமுண்டாச்சு. |
ஆரூடத்தில் நாற்பத்தியேழு வந்திருப்பது, உன் கெட்ட கிரகங்களெல்லாம் விலகி விட்டதைக் குறிக்கும். இனி உறவினர்கள் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். பலவித சிரமங்களைக் கொடுத்த நோயும் விலகும் காலம் இது. உன் சேமிப்பால் கடன்கள் யாவும் தீரும். பூமியில் சிறப்புடன் வாழ்வாய். இவை எல்லாம் இந்த ஆருடம் பார்த்த நாளில் இருந்து எழு நாளில் நடக்கும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 47 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஆரூடச், ஸ்ரீஅகத்தியர், நாளில், விலகும், horary