ஆரூடப் பாடல் 22 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௨௨. (22) வந்தால்..
உள்ளத்தின் கவலையெல்லாம் உடனே தீரும் உறவற்றுப் போனவரும் வந்து சேர்வார் விள்ளவும் முடியாது உந்தன் வாழ்க்கை வினோதமாம் பொன் பொருளும் சேர்க்கையாகும் வள்ளலின் கிருபையால் வருட மூன்று வலுக்குமப்பா எத்தொழிலைச் செய்தபோதும் கள்ளத்திரு மால்மருக னுதவியாலே கருதியதெல்லா முனக்கு ஜெயதாமே. |
ஆரூடத்தில் இருபத்தியிரண்டு வந்திருப்பதால், இனி உன் கவலைகளெல்லாம் நிலவைக் கண்ட இருள்போல் விலகும். பகையாகி பிரிந்து போனவரும் கூட உன்னிடம் வந்து சேருவார்கள். இனி வரும் நாட்களில் வினோதமான பொன் பொருள்களெல்லாம் சேர்க்கையாகும். எத் தொழிலை செய்தாலும் அது மிகுந்த லாபத்தை அளிக்கும். இந்த ராசி மூன்று வருடத்திற்கு நல்ல யோகமாக இருக்கும். திருமாலின் கிருபையால் எண்ணியதெல்லாம் இனி முடியும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 22 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடப், ஜோதிடம், சக்கரம், ஆரூடங்கள், ஆரூடச், பாடல், ஸ்ரீஅகத்தியர், கிருபையால், மூன்று, சேர்க்கையாகும், போனவரும், horary, வந்து, பொன்