ஆரூடப் பாடல் 20 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௨o. (20) வந்தால்..
கடன்பட்ட நெஞ்சம்போல் கலங்கிடாதே கபடமுள்ளோர் நேசமதை வைத்திடாதே படமுடியா கஷ்டமென்று பயப்படாதே பதட்டமாய் தெய்வத்தை நிந்திக்காதே குடும்பமதில் பகைசெய்து குணங்கெடாதே குருபலனும் வாரமூன்றில் வரும்தப்பாதே தடமதனில் நோய்நொடியால் தவித்திடாதே தணிந்திடவே நவக்கிரகபூஜைசெய்ய |
ஆரூடத்தில் இருபது வந்திருப்பதால், கடன்பட்டவனைப் போல நெஞ்சம் கலங்கி இருக்கிறாய். படாத பாடெல்லாம் பட்டிருக்கிறாய்.இதனால் வெறுப்படைந்து குடும்பத்தினரிடம் கோபம் கொள்ளாதே, தெய்வத்தை நிந்திக்காதே!. இன்னும் மூன்று வாரத்தில் உனக்கு குருபலம் கூடி வருகிறது. அப்போது உன் துயரங்கள் நீங்கும். அதுவரையில் கபட எண்ணமுடையவர்களை விட்டு விலகி இருக்கச் சொல்கிறார். நோய் நொடிகளின் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள நவக்கிரகங்களை வணங்கி வர வேண்டும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 20 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஆரூடச், ஸ்ரீஅகத்தியர், நிந்திக்காதே, தெய்வத்தை, horary