ஆரூடப் பாடல் 14 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௧௪. (14) வந்தால்..
பாரப்பா வந்தவனுக்கு நல்லயோகம் பலித்திடவே வந்ததினால் தனமேலாபம் சீரப்பா நோய்விலகும் மணமேகூடும் சிறுவர்கட்கு கல்வியுடன் செல்வமோங்கும் நேரப்பா குடும்பத்தின் கவலை நீங்கும் நெடுந்தூரம் போனவரும் வரவேநேரும் கோரப்பா பரம்பொருளை குணமுண்டாகும் கொண்டயெண்ணம் கைகூடும் நாளீரேழில். |
ஆரூடத்தில் பதினான்கு வந்திருப்பதால், இனி உனக்கு நல்ல யோகம் உண்டாகப் போகிறது. பீடித்திருக்கும் நோய் எல்லாம் விலகும். திருமண நிகழ்வு ஒன்று குடும்பத்தில் நிகழும். சிறுவர்களின் கல்வி சிறப்பாகும். உன்னைப் பிரிந்து வெகுதூரம் போனவர்கள் தேடி வருவார்கள். மிகுந்த செல்வமும், சிறப்பும் உன்னை வந்து சேரும். இவை எல்லாம் இன்றிலிருந்து பதினான்கு நாட்கள் கழித்து கைகூடும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 14 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், எல்லாம், பதினான்கு, horary, கைகூடும்