ஆரூடப் பாடல் 13 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௧௩. (13) வந்தால்..
ஆத்திரப்படவேண்டாம் அப்பாகேளு அகஸ்தியரின் வாக்கியந்தான் வீண்போகாது கோத்திரமே விளங்க குலந்தழைக்கும் கொற்றவனே புத்திரப்பே றுனக்குண்டாகும் கீர்த்தியுற மூத்தோர்கள் பொருள் கிடைக்கும் சினங்கொண்டு பிரிந்தவரு முறவேயாவார் கார்த்திடுவா யுனையடுத்த பேரை நீதான் கண்டிடுவாய் இம்மாதம் கழியத்தானே. |
ஆரூடத்தில் பதின்மூன்று வந்தால், அப்பனே ஆத்திரப்படாதே! நீ பட்ட துன்பங்கள் எல்லாம் விலகிவிடும். இனி உன் குடும்பம் தழைத்தோங்கும். புத்திரப்பேறு கிட்டும். பெரியோர்களின் பொருள் சேர்க்கையும், பகையானவர்களுடன் ஒற்றுமையும் உண்டாகும். தஞ்சம் என்று வந்தவர்களை ஆதரிக்கும் தன்மையும் உண்டாகும். இவை எல்லாம் இன்னும் ஒருமாததில் நடக்கும் என்கிறார். இது அகத்தியர் வாக்கு. ஒரு போதும் வீண் போகாது என்று கூறுகிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 13 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், உண்டாகும், எல்லாம், horary, வந்தால், பொருள்