ஆரூடப் பாடல் 12 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௧௨. (12) வந்தால்..
பலனளிக்கும் கிரகமெல்லாம் பகையேயாச்சு பனிரெண்டில் குருவுனக்கு பார்வையாச்சு கலகமுடன் குடும்பத்தில் கவலையாச்சு ஓர் கன்னியரால் மனைதனிலே விரோதமாச்சு நலமளிக்கும் தொழில் முறையில் நஷ்டமாச்சு நம்பியபேர் வஞ்சனையால் கஷ்டமாச்சு கிலேசமுடன் வந்தநோய் வருத்தலாச்சு கிருபையுடன் வாரமெட்டில் சுகமுண்டாமே. |
ஆரூடத்தில் பன்னிரெண்டு வந்தால், உனக்கு நல்ல பலனளிக்கும் கிரகங்கள் எல்லாம் பகையாக இருக்கின்றது என்பதாகும். பன்னிரெண்டில் குரு பார்வை வந்துவிட்டது. குடும்பத்தில் பெருங் கவலை உண்டாகும். பெண் ஒருத்தியால் கலகங்கள் ஏற்படும். தொழில் நஷ்டம் ஏற்படும். நம்பியவர்கள் வஞ்சிப்பதால் கடும் துயரம் உண்டாகும். நோயும் வருத்தும். எட்டுவாரம் சென்றால் தான் நன்மை கிட்டும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 12 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடப், ஜோதிடம், சக்கரம், ஆரூடங்கள், ஆரூடச், பாடல், ஸ்ரீஅகத்தியர், உண்டாகும், ஏற்படும், தொழில், வந்தால், horary, பலனளிக்கும், குடும்பத்தில்