ஆரூடப் பாடல் 1 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௧. (01) வந்தால்..
ஓங்கார பிரணவத்தி னுதவியாலே ஓதிடுவே னாரூட உண்மைதன்னை பாங்காக தொழிலோங்கும் மணமேகூடும் பாலர்கட்கு ஞானமுடன் கல்வியோங்கும் நீஙகாத நோய்நீங்கும் பொருளுஞ் சேரும் நினைந்தயெண்ணம் பலிக்குமயலுதவி தோன்றும் தீங்கினி நேராது செழித்துவாழ்வாய் தினமெட்டி லிதின்விபரம் தெரிகுவாயே. |
ஆரூடத்தில் ஒன்று என வந்தால், கவலைகளெல்லாம் ஒழிவதுடன், தொழில் விருத்தியும் ஏற்படுமாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடுமாம். பாலகர்களுக்கு ஞானமும் கல்வியும் ஓங்குமாம். பீடித்திருக்கும் நோய் நீங்குமாம். கை விட்டுப்போன பொருட்கள் வந்து சேருமாம். நினைத்த எண்ணம் பலிக்கும் அத்துடன் அயல் உதவியும் கிட்டுமாம். இனி தீங்குகள் நேராமல் செழிப்புடன் வாழலாமாம். இந்த ஆரூடம் பார்த்த நாளில் இருந்து எட்டு நாட்களில் இதன் விபரம் அறியமுடியுமாம் என்கிறார்.