ஜோதிடப் பாடம் – 41 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
அடுத்ததாக ஒரு கிரகம் எந்த கிரகத்துடன் கூடி இருக்கிறதோ, அல்லது பார்க்கப் படுகிறதோ அதன் பலனையும் கொடுப்பார். இந்த ஜாதகத்தில் செவ்வாயானவர் சனியுடன் சேர்ந்து இருக்கிறார். சனி 5, 6-ம் வீடுகளுக்கு அதிபதியல்லவா? 6-ம் வீடென்பது என்ன? 6-ம் வீடு செய்யும் தொழிலைக் குறிக்கிறது அல்லவா? 6-ம் வீடும் 11-ம் வீடும் தொழிலில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது அல்லவா? ஆக இந்த செவ்யாயின் தசையில் உத்தியோகத்தில் பதவி உயர்வைப் பெற்றார். இந்த ஜாதகத்தில் செவ்வாய் யாராலும் பார்க்கப் படவில்லை. ஆகையால் பார்க்கும் கிரகத்தின் பலனை அவரால் கொடுக்க இயலவில்லை. இப்போது ஒருகிரகம் எப்படிப்பலன் அளிக்கிறது எனத் தெரிந்து கொண்டீர்கள். சரி! சூரியன் தனது தசையில் எப்படிப் பலன் அளித்து இருப்பார் எனக் கூறுங்கள் பார்ப்போம்.
சூரியன் 12-ம் வீட்டின் அதிபதி. 5-ல் இருக்கிறார். அவர் இருப்பது சொந்த நட்சத்திரமான உத்திராடத்தில். சொந்த நட்சத்திரத்தில் இருப்பதால் அவர் இருக்கும் வீடான 5-ம் வீட்டுப் பலனை முதன்மையாக வழங்குவார். 5-ம் வீடு என்பது குழந்தைகளைக் குறிக்கும் வீடு. அவருக்குத் திருமணம் அப்போது ஆகவில்லையாதலால் குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை. 5-ம் வீடென்பது பதவி உயர்வைத்தடுக்கும் வீடு. அவருக்குப் பதவி உயர்வு எதுவும் கிடைக்கவில்லை; அவை கை. சூரியன் கேதுவுடன் சேர்ந்திருக்கிறார். கேதுவிற்கு சொந்த வீடுகள் கிடையாது. கேது சனியின் வீட்டில் இருப்பதால் சனிகொடுக்கக்கூடிய பலன்களைக் கொடுத்தாக வேண்டும். சனி 5, 6 ம்வீட்டிற்கு அதிபதியாகி 9-ம் வீட்டில் இருப்பதால் 5, 6, 9-ம் வீட்டின் பலன்களைக் கொடுத்தாக வேண்டும். அந்த சனியின் வீட்டில் கேது இருப்பதால் கேது சனியின் பலன்களைக் கொடுப்பார். கேதுவுடன் சூரியன் சேர்ந்திருப்பதால் சூரியன் கேது கொடுக்கக் கூடிய 6-ம் வீட்டுப் பலன்களையும் கொடுத்து விட்டார். இவருக்கு சூரிய தசை சுய புக்தியில்தான் வேலை கிடைத்தது. ஆகவே சூரியன் எப்படி வேலையைக் கொடுத்தார் பாருங்கள்.
இதே போன்று ஒவ்வொரு கிரகமும் எந்தக்கிரகத்தின் சாரத்தில் இருக்கிறது என்று பார்த்து, எதனுடன் சேர்ந்திருக்கிறது என்று பார்த்தும், யாரால் பார்க்கப்படுகிறது என்று பார்த்தும் பலன் சொல்ல வேண்டும். நாம் உதாரணத்திற்குப் பல ஜாதகங்களைப் பார்ப்போம். அதற்குப்பின் எல்லாம் உங்களுக்கு விளங்கிவிடும்.
நீங்கள் “ப்ரச்சன ஜோதிடம்” பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இது ஜாதகம் இல்லாதவர்களுக்கு மிக உதவியாக இருக்கும். உங்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. உதாரணமாக உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை எனக் கொள்ளுங்கள். ஜாதகமும் இல்லை. எப்படிப் பலன் கூறுவது? இந்த மாதிரி சமயங்களில்தான் இந்தப் ப்ரச்சன ஜோதிடம் உதவுகிறது. நீங்கள் ஜோதிடரிடம் செல்லும் நேரத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அவர் பலன் சொல்லுவார். அது சரியாக வரும். உங்களுக்கு எப்போது பிரச்சனை இருக்கிறதோ அப்போது உங்களை ஆள்கின்ற கிரகங்கள் உங்களுக்குப் பலன் சொல்லும். உங்கள் எதிர்காலத்தைக் காட்டும். இந்த கிரகங்களுக்கு “ஆளும் கிரகங்கள்” எனப் பெயர். இந்த ஆளுக் கிரகங்கள் உதவி ப்ரச்சன ஜோதிடத்திற்கு மட்டுமன்றி ஜாதகம் இருப்பவர்களுக்கும் பலன் சொல்லப் பயன்படும். வேலை எப்போது கிடைக்கும்? திருமணம் எப்போது ஆகும்? நான் எப்போது வெளி நாடு செல்வேன்? போன்ற கேள்விகளுக்கும் இந்த ஆள்கின்ற கிரகத்தின் மூலமாகப் பதில் கூற முடியும். அவற்றை எல்லாம் அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 41 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, சூரியன், பலன், ஜோதிடப், வீடு, ஜோதிடம், இருப்பதால், எப்போது, கேது, உங்களுக்கு, பார்ப்போம், சொந்த, சனியின், வேலை, வேண்டும், பலன்களைக், வீட்டில், பதவி, அவர், ஜோதிடர், ஆகலாம், பாடம், நீங்களும், கிரகங்கள், ஆள்கின்ற, கொடுத்தாக, பாடங்கள், பார்க்கப், இருக்கிறதோ, இருக்கிறது, பார்த்தும், ஜாதகம், பிரச்சனை, நீங்கள், கொடுப்பார், எல்லாம், ப்ரச்சன, கேதுவுடன், எனக், குறிக்கிறது, வீட்டின், அல்லவா, எப்படிப், கிரகத்தின், பலனை, வீடும், வீடென்பது, இருக்கிறார், அப்போது, எதுவும், கிடைக்கவில்லை, திருமணம், வீட்டுப், ஜாதகத்தில், இருக்கும், தசையில்