ஜோதிடப் பாடம் – 37 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். ராகுதசை, குரு புக்தியில் பாலில் தண்ணீர் கலந்த குற்றத்திற்காக 6-மாதம் ஜெயில் தண்டனை விதித்து விட்டார்கள். சரி! எப்படி ராகு தசை, குரு புக்தியில் ஜெயில் தண்டனை கிடைத்தது என்பதைப் பார்ப்போம். 11-ல் ராகு; அவர் நல்லதையே செய்ய வேண்டும். செய்யவில்லை. அதற்கு மாறாக ஜெயில் தண்டனையைக் கொடுத்து விட்டார். ராகு 11-ல் இருந்தாலும் அவர் இருப்பது புதனின் நட்சத்திரமான கேட்டையில்; புதன் இருப்பது 8-ம் வீட்டில்; ஆக 8-ம் வீட்டின் பலனையும் கொடுக்கும் அதிகாரம் ராகுவிற்கு கிடைத்து விடுகிறது. அடுத்ததாக குரு 7-ம் வீட்டில் உச்சத்தில்; இருப்பினும் அவர் 3, 12-ம் வீடுகளுக்கு அதிபதி; ஆகவே 3, 8, 12 வீடுகள் கொடுக்கும் ஜெயில் தண்டனை இவருக்கும் கிடைத்து விட்டது. உச்சனாக இருப்பதால் நல்லதையே செய்ய வேண்டும் என்ற நியதி இல்லையென்பதைப் பாருங்கள். ஒருவர் House Arest என்கிற வீட்டுக் காவலில் வைக்கப் படுகிறார் எனக் கொள்ளுங்கள். அவர் வீட்டிலேயே இருப்பதால் 3ம் வீட்டிற்குப் பதிலாக 4-ம் வீடு சம்மந்தப் பட்டு இருக்கும். அதாவது 4, 8, 12-ம் வீடுகள் சம்மந்தப் பட்டு இருக்கும்.
மீதமுள்ளவற்றை அடுத்த பாடத்தில் பார்ப்போம். 12 பாவங்களையும் பற்றி எழுதியபின் மாந்தியைப் பற்றி எழுதப்போகின்றோம். மாந்தியை எப்படிக் கணிப்பது அதன் பலன்கள் என்ன என்பதையும் எழுதிவிட்டால் அதற்குப் பின் பலன் எப்படிக் கூறுவது என்றும் விளக்கிவிட்டால் ஜோதிடம் ஓரளவிற்குச் சொல்லிக் கொடுத்தாற்போல் ஆகும். பலன் சொல்வது என்பது மிகவும் கடினமான காரியமாகும். பார்ப்போம். நம்மால் முடிந்ததை விளக்கமாகவே கூறுவோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 37 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், அவர், ஜோதிடம், ஜெயில், ஆகலாம், பார்ப்போம், நீங்களும், பாடம், தண்டனை, ராகு, ஜோதிடர், குரு, பட்டு, சம்மந்தப், இருப்பதால், இருக்கும், பலன், எப்படிக், வீடுகள், பற்றி, நல்லதையே, செய்ய, புக்தியில், பாடங்கள், வேண்டும், இருப்பது, கொடுக்கும், வீட்டில், கிடைத்து