துலாம் இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள்
சித்திரை நக்ஷத்திரம் 3, 4, பாதங்கள், சுவாதி, விசாகம், 1, 2, 3, பாதங்களில் பிறந்த துலாராசிக்காரர்கள் செல்வம் மிகுந்தகுடும்பத்தில் செல்வாக்குடன் இருப்பார்கள்.நல்ல ஜசுவரியமும், தனதான்யங்களும், பூமி காணி வீடு போன்ற சொத்துக்களையும் வண்டி வாகனங்களையும், மாடு கன்றுகளுடன் பால் பாக்யத்தையும் பெற்று இருப்பார்கள்.
குடும்பத்தில் அதிகமான நபர்கள் இருப்பார்கள். பெரிய மனிதர்கள், செல்வாக்கு அதிகாரம் உயர்பதவி கொண்டவர்களாகளின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.தார்மீக குணங்களும், தெய்வ வழிபாடுகளும் நிறைந்து விளங்கும்.ஆசார அனுஷ்டானங்களைச செய்து வருவார்கள்.
துலா ராசியில் பிறந்தவர்கள் பேச்சில் ஆணித்தரமாகவும், வியாபார நோக்ங்கள் கொண்ட பேச்சாகவும் பேசுவார்கள்.அதிகமாக மற்றவர்களுடன் நெருங்கிப் பழகமாட்டார்கள். தங்கள் குடும்பத்தைவிட்டு மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடமாட்டார்கள். துலா ராசியில் பிறந்த ஆண்களுக்கு இரண்டு மனைவிகள் இருக்கலாம்.
சுபகிரஹங்கள் பார்வையுடனும், பலங்களுடனும், பிறந்த துலாராசிக்காரர்கள் ஆயுள் பாவம் 85 ஆண்டுகளுடன் சுக செளகர்யங்கள் நிரம்பப் பெற்று விளங்குவார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
துலாம் இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள், ஜோதிடக், குறிப்புகள், பிறந்த, இருப்பார்கள், பலன்கள், ஜோதிடம், பிறந்தவர்களுக்குப், துலாம், இராசியில், ராசியில், துலா, பெற்று, துலாராசிக்காரர்கள்