சிந்துப்பாவியல்

27. அடி
-
தாளவட் டணைகளின் அளவோ டமைந்து
சிந்துப் பாவடி சீர்பெற நடக்கும்
விளக்கம் : தாள வட்டணை (ஆவர்த்தம்) என்பது யாது? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர்த் தாளம் என்பது யாது? என்பதையும், அதன் உள்ளுறுப்புகள் யாவை என்பதையும் உணர வேண்டும்.
(தாளம், அதன் உள்ளூறுப்புகள், கோலும் இனங்களும் (சாதிகளும்), வட்டணை (ஆவர்த்தம்), தாளம் போடும் முறை என்ற தலைப்புகளில் (நூ. 6) விளக்கத்துள் விவரிக்கப்பட்டுள்ளன. அங்கு காண்க). எனவே சிந்துப் பாடலில் உள்ள அடிகள் அப்பாடலின் தாள வட்டணையின் அளவில் அமைந்திருக்கும் என்பது தெளிவு.
---
28.
-
எட்டின் மடங்கினும் நான்கின் மடங்கினும்
எட்டின் இழியா தியலும் சீர்களால்
சிந்தின் அடிகள் சிறப்புற நடக்கும்.
விளக்கம் : சிந்துப் பாடல்களில் பெரும்பாலன ஆதி தாளத்தில் அடங்குமாறு அமைந்துள்ளன. அவற்றைப் பாடும் போது அடியின் முதற்பகுதி ஒரு கோலிலும் ||4| அடுத்த பகுதி இரண்டு சுழிகளிலும் |00| அடங்குகின்றன.
காட்டு : ஓர் ஆதிதாள வட்டணையில் அடங்கும் அடி.
ஓம் சக் தி ஓம் சக்தி ஓம் . ப ரா சக் தி
ஓம் சக் தி ஓம் சக்தி ஓம் . . . . .
(அசை நீட்டங்கள் புள்ளிகளால் குறிக்கப் பட்டுள்ளன.)
மேற்காட்டியபடி கோலிற்குரிய நான்கு எண்ணிக்க்கையில் முதல் அரையடியும், இரு சுழிகளுக்குரிய
நான்கு எண்ணிக்கையில் அடுத்த அரையடியும் ஆக ஓர் ஆதிதாள வட்டணையில் இதன் ஓரடி முழுவதும்
அடங்குவதைக் காணலாம். எட்டாம் எண்ணிக்கையில் எழுத்துகளே இல்லை என்றாலும் ஏழாம் இடத்தில்
இறுதியாக வரும் அசை எட்டாம் சீராக நீண்டு இசைக்கிறது. இந்த இரண்டு வரிகளும் சேர்ந்து ஓரடி.
இந்தப் பாடலில் ஒவ்வோரடியும் ஓர் ஆதி தாள வட்டணையில் அடங்குகிறது.காட்டு : இரண்டு ஆதிதாள வட்டணையில் அடங்கும் அடி
ஆ று மு க வ டி வே ல வ னே க லி யா ண மும் செய் ய வில் லை . . . சற் றும் அச் ச மில் லா ம லே கைச் ச ர சத் துக் க ழைக் கி றாய் என் ன தொல் லை . . (கா. சி.க.வ.ப.165)இப்பாடலில் மேற்கண்ட நான்கு வரிகளும் ஓரடியாகும். ஓரடியில் பதினாறு சீர்கள் இருப்பதைக் காணலாம். இது பதினாறு சீர்க் கழிநெடிலடியாகும். இதன் ஓரடி இரண்டு ஆதி தாள வட்டணையில் அடங்கும்.
காட்டு : ஏக தாளத்தில் மூன்று வட்டணையில் அடங்கும் அடி.
கண் ணா . மி ரம் ப டைத் த
விண் ணூ . ரி டம் த ரித் த
கன வயி ரப் படை யவன் மக ளைப் புணர்
கர்த் த னே . . . தி ருக்
கழு கும லைப் பதி யனு தின முற் றிடு
சுத் த னே . . .
(கா.சி.க.வ.ப.167)
மேற்கண்ட மூன்று வரிகளிலும் பன்னிரண்டு சீர்கள் உள்ளன. இது நான்மை இன ஏக தாளம்.
இத்தாளத்தின் குறியீடு |4 என்பது. நான்கு எண்ணிக்கையுள்ள ஒரு கோல் மட்டுமே இதில் உள்ளது.
சுழியோ, அரைச்சுழியோ இல்லை. இத்தாளத்தில் மூன்று வட்டணையில் இப்பாடலின் (ஒரு கண்ணியின்)
ஓரடி அடங்குகிறது.சிறுபான்மைச் சிந்துப் பாடல்களின் கண்ணிகள் நான்மை இன ஏக தாளத்தில் அடங்குகின்றன. மிக்ச்சில சிந்துகளே வேறு தாளங்களில் உள்ளன.
காட்டு : ஏக தாளத்தில் ஐந்து வட்டணையில் அடங்கும் அடி
சந் த வரை வந் . த கு க நா . தா . . . . . ப ரை அந் த ரி ம னோன் . ம ணி யா மா . தா . . . . . தந் த சண் . மு க ச டாட் . ச ர வி நோ . தா . . . . . கு ழைக் கா . தா . . . . சூ . ரர் வா . தா . . . . . வ ன சஞ் . ச ரிவெண் குஞ் . ச ரி ச மே . தா . . . . . . . (கா. சி. க.வ.ப.173)மேற்கண்ட பாடலில் உள்ள ஐந்து வரிகளும் ஓரடி. இவ்வடியில் இருபது சீர் இருப்பதைக் காணலாம். இது நான்மை இன ஏக தாளத்தில் ஐந்து வட்டணைகளில் அடங்கும்.
எனவே சிந்துப்பாவின் அடிகள் ஆதி தாளத்திலும், அதன் மடங்கிலும், ஏக தாளத்தின் மடங்கிலும், நடக்கும் என்பதையும், ஓரடியில் எட்டு சீர்களுக்குக் குறையாத சீர்களைக் கொண்டிருக்கும் என்பதையும் உணர்கிறோம்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

