சிந்துப்பாவியல்

25. முடுகியல்
-
முடுகியல் சந்த முறைப்படி நடக்கும்.
விளக்கம் : இசை நீட்டத்திற்கு இடமின்றிப் பாடலுக்குரிய நடையில் ஒருவகைச் சந்த ஓசையுடன் விரைந்து செல்லுமாறு அமைக்கப் பட்ட சீர்களை உடையது முடுகியல் அடியாகும்.
-
சிந்துப் பாக்களின் சீர்களில் உள்ள
ஒவ்வோர் உயிரும் ஓரசை யாகும் (நூ. 6)
சிந்துப் பாடல்கள் சிலவற்றில் அப்பாடல்களின் இடையில் முடுகியல் அடிகள் வருவதுண்டு. குறிப்பிட்ட ஒரு நடையிலமைந்த பாடலில் முடுகியற் சீர்கள் மட்டும் விரைவு நடையில் (ஓரசைக்கு இரண்டு உயிராக) நடப்பதுண்டு. முடுகியலின் சீரமைப்புச் சந்தப் பாடலின் இலக்கணத்தைப் பெற்றிருக்கும்.
சந்தப்பா இலக்கணப்படிக் குறில் ஒரு மாத்திரை பெறும்; குறிலொற்று, நெடில், நெடிலொற்றுகள் இரண்டு மாத்திரை பெறும்; அரையடி, அடியிறுதியில் உள்ள குறில் நெடிலாகவும் ஒலிக்கும்.
இதன்படி முடுகியற் சீர்கள் தாம் அமைந்துள்ள பாடலின் நடைக்கேற்ற மாத்திரையைப் பெற்றுவரும்.
காட்டு : (1)
வன் னத் தி னை மா வைத் தெள் ளி யே . உண் ணும் வாழ்க் கைக் கு றக் குல வள் ளி யே . உயிர் வாங் கப் பி றந் திட் ட கள் ளி யே . இ ரு வட மே ருவை நிக ரா கிய புய மீ தணி பல மா மணி மா லை ப டீ ரெ னத் துள் ளி யே . வி ழ வான் ம தி வீ சுந் தீ அள் ளி யே . .இது மும்மை நடைப் பாடல். இதில்
- | வட மே ருவை | நிக ரா கிய | புய மீ தணி | பல மா மணி |
காட்டு : (2)
கண் ணா . மி ரம் ப டைத் த
விண் ணூ . ரி டம் த ரித் த
கன வயி ரப் படை யவன் மக ளைப் புணர்
கர்த் த னே . . . தி ருக்
கழு கும லைப் பதி யனு தின முற் றிடு
சுத் த னே . . .
(கா. சி. க.வ. ப. 167)
இது நான்மை நடைப் பாடல். இதில்
- | ‘கன வயி ரப் படை | யவன் மக ளைப் புணர்’ |, ‘கழு கும லைப் பதி | யனு தின முற் றிடு’ |
முடிகியல்கள் காவடிச் சிந்துப் பாக்களுக்கு மிகுந்த ஒலி நயத்தைத் தருகின்றன. முடிகியல் பாடலுக்குரிய நடையில் மட்டுமே நடக்கும் என்பதை வலியுறுத்தாமையால், மிகச் சில காவடிச் சிந்துகளில் பாடல் ஒரு நடையிலும் முடுகியல் வேறு நடையிலும் அமைவதுண்டு.
காட்டு :
திரு வு . ற் றி லகு கங் . க வரை யி . ற் பு கழ் மிகுந் . த திக ழ . த் தி னமு றைந் . த வா . ச . னை - . மி . கு . மகி மை . ச்சு கீர்த தொண் . டர் நே . ச . னைப் - . ப . ல . தீய பாதக காரராகிய சிக ர . க்கி ரிபி ளந் . த வே . ல . னை - . உ . மை. தக ர . க்கு ழல்கொள்வஞ் . சி பா . ல . னை . (கா. சி. க வ. ப.131)----
26.
-
முடுகியல் அடியே நாற்சீர்த் தாகும்.
விளக்கம் : சிந்துப் பாடல்களின் இடையில் வருகின்ற முடுகியல் அடிகள் நான்கு சீர்களைக் கொண்டவைகளாக இருக்கும்.
காட்டு :
வன் னத் தி னை மா வைத் தெள் ளி யே . உண் ணும்
வாழ்க் கைக் கு றக் கு ல வள் ளி யே . உ யிர்
வாங் கப் பி றந் திட் ட கள் ளி யே . இ ரு
வட மே ருவை நிக ரா கிய புய மீ தணி பல மா மணி
மா லை ப டீ ரெ னத் துள் ளி யே . வி ழ
வான் ம தி வீ சுந் தீ அள் ளி யே . .
(க . சி. க.வ.ப. 180)
இதில்
- |வடமேருவை |நிகராகிய| புயமீதணி |பலமாமணி|
-----
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

