| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
நாதி
|
ஞாதி ; உறவினன் ; காப்பாற்றுவோன் ; பெருங்காயவகை .
|
|
நாதிக்காரன்
|
ஞாதி ; உறவினன் .
|
|
நாதித்தல்
|
ஒலியெழுதல் ; ஒலியெழுப்புதல் .
|
|
நாதியன்
|
காண்க : நாதான் .
|
|
நாதேயம்
|
காண்க : வஞ்சிக்கொடி ; சீந்திற் கொடி ; துரிசு ; இந்துப்பு .
|
|
நாந்தகம்
|
திருமாலின் வாள் ; வாள்
|
|
நாந்தல்
|
மந்தாரம் ; ஈரம் ; மந்தாரமாய் இருக்குங் காலம் .
|
|
நாந்தி
|
நாடக முன்னுரை ; பாயிரம் ; சிராத்த வகை ; முதுகு .
|
|
நாந்திகந்துரு
|
மரமஞ்சள் .
|
|
நாந்துதல்
|
நனைதல் .
|
|
நாநல்கூர்தல்
|
பேசாதிருத்தல் .
|
|
நாநீட்டுதல்
|
நாவைநீட்டிப் பேசுதல் .
|
|
நாப்பண்
|
நடு ; தேர்நடு ; யாழினுறுப்பு .
|
|
நாப்பாடம்
|
மனப்பாடம் பண்ணிய வாய்ப்பாடம் .
|
|
நாப்பு
|
பரிகாசம் , ஏளனம் .
|
|
நாப்புக்காட்டுதல்
|
அழகுகாட்டுதல் ; வஞ்சித்தல் .
|
|
நாப்புதல்
|
அழகுகாட்டுதல் ; வஞ்சித்தல் .
|
|
நாப்புற்று
|
நாநோவுவகை .
|
|
நாபதி
|
பேச்சாற்றல் படைத்தவன் ; பேச்சு அருளுவோன் .
|
|
நாபி
|
கொப்பூழ் ; கத்தூரி ; காண்க : வச்சநாபி ; வச்சநாபி முறிவு என்னும் ஒரு மருந்துவகை .
|
|
நாபிக்கொடி
|
கொப்பூழ்க்கொடி .
|
|
நாபிசன்
|
திருமாலின் உந்தியில் பிறந்தோனான நான்முகன் .
|
|
நாபிதன்
|
காண்க : நாவிதன் .
|
|
நாபிநாடி
|
காண்க : நாபிக்கொடி .
|
|
நாபிநாளம்
|
காண்க : நாபிக்கொடி .
|
|
நாபிரம்
|
விந்து .
|
|
நாபீலம்
|
கடிதடம் ; கொப்பூழ்க்குழி .
|
|
நாம்
|
அச்சம் ; தன்மைப் பன்மைப் பெயர் ; தாங்கள் .
|
|
நாம்பல்
|
இளைப்பு : இளைத்த விலங்கு .
|
|
நாம்பன்
|
இளவெருது .
|
|
நாம்பு
|
மெலிந்தது ; மெல்லிய கொடி .
|
|
நாம்புதல்
|
இளைத்தல் .
|
|
நாமக்கட்டி
|
வைணவர் அணியுந் திருமண் கட்டி .
|
|
நாமக்காரர்
|
வைணவர் .
|
|
நாமகரணம்
|
பெயரிடுஞ் சடங்கு .
|
|
நாமகள்
|
பிரமன் நாவில் வசிக்கும் கலைமகள் .
|
|
நாமகீர்த்தனம்
|
கடவுள் திருப்பெயர் ஒதுகை .
|
|
நாமசங்கீர்த்தனம்
|
கடவுள் திருப்பெயர் ஒதுகை .
|
|
நாமசேடம்
|
பெயர்மட்டும் மிஞ்சும் சாவு .
|
|
நாமஞ்சாத்துதல்
|
பெயரிடுதல் ; நெற்றியில் நாமம் இடுதல் ; ஏமாற்றுதல் .
|
|
நாமஞ்செய்தல்
|
பெயரிடுதல் .
|
|
நாமடந்தை
|
காண்க : நாமகள் .
|
|
நாமடிக்கொள்ளுதல்
|
நாவை மடித்தல் .
|
|
நாமத்தாலி
|
கார்காத்த வேளாளரது விளக்கிடு கலியாணத்தில் பெண் கழுத்தில் அணியும் தாலிவகை .
|
|
நாமதாது
|
பெயரடியாகப் பிறந்த வினை .
|
|
நாமதாரணம்
|
பெயர் தரிக்கை ; திருமண் தரிக்கை .
|
|
நாமதாரி
|
நாமந்தரிப்பவனான வைணவன் ; மூங்கில்வகை ; சீலைவகை .
|
|
நாமதேயம்
|
பெயர் ; யாகாதிகளுக்குப் பெயரிடும் வேதவாக்கியவகை .
|
|
நாமநீர்
|
அச்சத்தைத் தரும் கடல் .
|
|
நாமம்
|
திருமண் கட்டி ; அச்சம் ; நிறைவு ; புகழ் ; திருமாலின் பன்னிரண்டு பெயர்களைக் கூறி உடலில் இடும் திருமண் காப்பு ; பேர் ; தும்பைச் செடி ; முள்தராசின் நடு ; காண்க : நாரத்தை ; பாசி .
|
|
நாமமிடுதல்
|
காண்க : நாமஞ்சாத்துதல் .
|
|
நாமமோதிரம்
|
பெயர் எழுதிய மோதிரம் .
|
|
நாமயம்
|
தற்போதம் .
|
|
நாமராசி
|
பெயர்ப் பொருத்தம் ; இராசிப் பொருத்தம் .
|
|
நாமவந்தம்
|
காண்க : யானைநெருஞ்சி .
|
|
நாமவெகுண்டம்
|
தும்பைப்பூடு .
|
|
நாமவைகுண்டம்
|
தும்பைப்பூடு .
|
|
நாமறுதல்
|
பேருமில்லாதபடி முற்றும் அழிந்து போதல் .
|
|
நாமனூரலைவாய்
|
திருச்செந்தூர் .
|
|
நாமாது
|
காண்க : நாமகள் .
|
|
நாமாவளி
|
திருப்பெயர் வரிசை .
|
|
நாமிதம்
|
வளைவு .
|
|
நாமுடி
|
நாநுனி .
|
|
நாமோச்சாரணம்
|
திருப்பெயரைச் சொல்லுதல் .
|
|
நாய்
|
ஒரு விலங்கு ; சூதாடுகருவி .
|
|
நாய்க்கடி
|
நாயின் கடிப்பு ; நாய்க்கடியால் உண்டாகும் சன்னி நோய் .
|
|
நாய்க்கடுகு
|
நாய்வேளைப்பூடு .
|
|
நாய்க்கரந்தை
|
குன்றிக்கொடி .
|
|
நாய்க்குட்டி
|
குட்டிநாய் ; ஒரு பணிவுமொழி .
|
|
நாய்க்குணம்
|
இழிகுணம் ; முருட்டுத்தனம் .
|
|
நாய்க்கெரித்தல்
|
நாய்க்குச் சோறு சமைத்தலான இழிதொழில் செய்தல் .
|
|
நாய்க்கெரிப்போன்
|
நாய்க்குச் சோறு சமைப்பவனான சண்டாளன் .
|
|
நாய்கன்
|
வணிகன் ; தலைவன் ; கணவன் ; தந்தை .
|
|
நாய்ச்சீரகம்
|
ஒரு பூண்டுவகை .
|