| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
நாண்மீன்
|
அசுவினி முதலிய விண்மீன் .
|
|
நாண்முதல்
|
அதிகாலை .
|
|
நாண்முல்லை
|
போரின்பொருட்டுக் கணவன் பிரிந்த இல்லிலே தலைவி தற்காத்துத் தங்கிய நிலைமை கூறும் புறத்துறை .
|
|
நாண்முழவு
|
காலை முரசு ; நாழிகைப் பறை .
|
|
நாண்மேயல்
|
காலை மேய்ச்சல் .
|
|
நாண்மை
|
வெட்கம் ; மகளிர் கூச்சம் .
|
|
நாணக்கேடு
|
வெட்கமின்மை .
|
|
நாணகம்
|
நாணயம் .
|
|
நாணநாட்டம்
|
தலைவி நாணும் வகையால் அவளுக்குத் தலைவனுடன் கூட்டமுண்மையை ஆராய்ந்தறிகை .
|
|
நாணம்
|
வெட்கம் ; அறிவு ; பயபக்தி ; மானம் ; தணிகை ; கூச்சம் ; மகடூஉக் குணம் நான்கனுள் ஒன்று .
|
|
நாணயக்காரன்
|
காசுக்கடைக்காரன் ; செயலில் நேர்மையாக நடப்பவன் .
|
|
நாணயஞ்செலுத்துதல்
|
செயலில் தகுதிகாட்டுதல் .
|
|
நாணயத்தப்பு
|
நேர்மை தவறுகை .
|
|
நாணயம்
|
நேர்மை ; மனச்சாட்சி ; செயல் முதலியன குறித்த பயன் தவறாமை ; நேர்த்தியானது ; முத்திரையிடப்பட்ட காசு ; கட்டுப்பாடு ; விலங்கின் மூக்கிலிடுங் கயிறு ; இயற்கை நிகழ்ச்சி .
|
|
நாணயவான்
|
நேர்மை தவறாதவன் .
|
|
நாணயவேலை
|
நேர்த்தியான வேலை .
|
|
நாணல்
|
ஒரு புல்வகை ; வெட்கப்படுதல் ; வளைதல் ; தருப்பைவகை .
|
|
நாணற்கரும்பு
|
கரும்புவகை .
|
|
நாணாளும்
|
தினந்தோறும் .
|
|
நாணி
|
நாணமுடையாள் ; வில்நாண் .
|
|
நாணிக்கொள்ளுதல்
|
காண்க : நான்றுகொள்ளுதல் .
|
|
நாணித்தல்
|
நாணுதல் .
|
|
நாணிலி
|
நாணம் அற்றோர் .
|
|
நாணிழல்
|
காலைநிழல் .
|
|
நாணீர்
|
புதுப்புனல் .
|
|
நாணு
|
நாணம் .
|
|
நாணுகம்
|
குதிரை .
|
|
நாணுதல்
|
வெட்கப்படுதல் ; மனங்குன்றுதல் ; பயபக்தி காட்டுதல் ; அஞ்சுதல் ; பிணங்குதல் ; அடங்குதல் ; குவிதல் .
|
|
நாணுவம்
|
நாகணவாய்ப்புள் .
|
|
நாணுவரையிறத்தல்
|
பத்து அவத்தையுள் நாண் நீங்குதலாகிய அவத்தைவகை .
|
|
நாணெறிதல்
|
நாணைத் தெறித்து ஒலியெழுப்புதல் .
|
|
நாணேற்றுதல்
|
வில்லை வளைத்து நாணைக் கொளுவுதல் .
|
|
நாணேறிடுதல்
|
வில்லை வளைத்து நாணைக் கொளுவுதல் .
|
|
நாணையம்
|
காண்க : நாணயம் .
|
|
நாத்தலைமடிவிளி
|
சீழ்க்கை .
|
|
நாத்தழும்பிருத்தல்
|
பலமுறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்கமுண்டாதல் .
|
|
நாத்தழும்புதல்
|
பலமுறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்கமுண்டாதல் .
|
|
நாத்தழும்பேறுதல்
|
பலமுறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்கமுண்டாதல் .
|
|
நாத்தனார்
|
கணவனுடன் பிறந்தாள் .
|
|
நாத்தனாள்
|
கணவனுடன் பிறந்தாள் .
|
|
நாத்தாங்கி
|
காண்க : நாதாங்கி ; இலைக்கள்ளி வகை .
|
|
நாத்தாங்கிப்பேசுதல்
|
எண்ணிப் பேசுதல் ; நாக்குழறிப் பேசுதல் .
|
|
நாத்தி
|
கணவனுடன் பிறந்தவள் ; ஒன்றுக்கு உள்ளதான ஒரு பொருள் மற்றொன்றுக்கு இல்லாதாகை ; இன்மை ; அழிவு ; தாழ்வாரம் .
|
|
நாத்திகம்
|
கடவுள் இல்லை என்னும் கொள்கை ;தெய்வ நிந்தனை .
|
|
நாத்திகன்
|
கடவுளும் இருவினைப் பயனும் இல்லை என்னும் கொள்கை உள்ளவன் ; சமய ஒழுக்கம் அற்றவன் .
|
|
நாத்தூண்
|
காண்க : நாத்தனார்(ள்) .
|
|
நாதக்குடம்
|
சங்கு .
|
|
நாதக்குமிழ்
|
விந்து தங்கும் உடலுறுப்பு .
|
|
நாதக்குழல்
|
ஊதுகருவி ; விந்துக்குழல் .
|
|
நாதகிருத்தியர்
|
நற்செயல்கட்கு அனுப்பப்படும் தேவதூதர் .
|
|
நாதகீதன்
|
சிவபிரான் .
|
|
நாததத்துவம்
|
ஞானசத்தியின் இருப்பிடமும் சுத்த தத்துவங்களுள் ஒன்றுமாகிய தத்துவம் .
|
|
நாதம்
|
சத்தம் ; ஒலி ; வாச்சிய ஒசை ; இசைப்பாட்டு ; சிவபிரானது ஒன்பதுவகை மூர்த்தங்களுள் ஒன்று ; பாதி வட்டமான மந்திரலிபி ; தலைவனையுடைமை ; செம்பால் , சோணிதம் .
|
|
நாதரவி
|
உடற்கொழுப்பு .
|
|
நாதரரூபதரை
|
பார்வதி .
|
|
நாதரூபம்
|
சிவனது ஒலிவடிவு .
|
|
நாதவத்தம்
|
காண்க : யானைநெருஞ்சி .
|
|
நாதவுப்பு
|
பூமியில் உண்டாகும் உப்பு .
|
|
நாதன்
|
தலைவன் ; அரசன் ; கணவன் ; முனிவன் ; குரு ; இறைவன் ; சிவன் ; அருகன் ; தமையன் .
|
|
நாதாக்கள்
|
ஞானியர் .
|
|
நாதாக்கியை
|
காண்க : நாதரூபதரை .
|
|
நாதாங்கி
|
பூட்டு , தாழ்ப்பாள் , சங்கிவி இவற்றை மாட்ட உதவும் கதவுநிலை உறுப்பு .
|
|
நாதாந்தம்
|
ஞானநெறிகளுள் ஒன்று .
|
|
நாதாந்தன்
|
சிவன் .
|
|
நாதாந்தி
|
பொன்னிமிளை .
|
|
நாதார்
|
ஏழைக்குடிகள் .
|
|
நாதான்
|
தலைவன் .
|