| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
நாட்போது
|
அன்றலர்ந்த போது .
|
|
நாடகக்கணிகை
|
நாட்டியப் பெண் .
|
|
நாடகக்காரன்
|
நாடகமாடுவோன் ; காமுகன் ; பாசாங்குக்காரன் .
|
|
நாடகக்காரி
|
நாடகமாடுவோள் ; பாசாங்குக் காரி .
|
|
நாடகச்சந்தி
|
முகம் , பிரதிமுகம் , கருப்பம் , விளைவு , துயத்தல் என்னும் ஐவகைப்பட்ட நாடகக் கதைப்பொருத்து .
|
|
நாடகசாலை
|
கூத்து நிகழும் இடம் ; நாடகக் கணிகை .
|
|
நாடகசாலையர்
|
கூத்தர் , நடிகர் .
|
|
நாடகத்தமிழ்
|
முத்தமிழில் கூத்துப்பற்றி வழங்கும் தமிழ் இலக்கியப் பகுதி .
|
|
நாடகத்தரம்பையர்
|
மேனகை , அரம்பை , ஊர்வசி , திலோத்தமை என்னும் தேவகணிகையர் .
|
|
நாடகத்தரு
|
நாடகப் பாடல்வகை .
|
|
நாடகத்தி
|
கூத்து நிகழ்த்தும் பெண் ; விபசாரி .
|
|
நாடகத்துறை
|
நடனவித்தை .
|
|
நாடகப்பண்
|
நாடகத்தில் வழங்கும் பண்வகை .
|
|
நாடகபப்பரத்தை
|
காண்க : நாடகக்கணிகை .
|
|
நாடகப்பெண்
|
காண்க : நாடகக்கணிகை .
|
|
நாடகபாத்திரம்
|
நாடக மேடையில் நடிப்போன்(ள்) .
|
|
நாடகம்
|
கலை அறுபத்து நான்கனுள் ஒன்று ; காண்க : நாடகத்தமிழ் ; கதை மாந்தர்களின் வடிவம் பூண்டு ஒரு கதையை நடந்ததுபோல் நடித்துக்காட்டுவது .
|
|
நாடகமகள்
|
நாடகமாடுங் கணிகை .
|
|
நாடகமாடுதல்
|
கூத்து நடித்தல் .
|
|
நாடகமேடை
|
நாடகமாடும் அரங்கு .
|
|
நாடகர்
|
கூத்தர் .
|
|
நாடகவழக்கு
|
நாடகத்திற்குரிய நெறி ; புனைந்துரை வழக்கு .
|
|
நாடகவிருத்தி
|
சாத்துவதி , ஆரபடி , கைசிகி , பாரதி என்னும் நால்வகை நாடகநடை .
|
|
நாடகன்
|
நடனமாடுவோன் .
|
|
நாடகாங்கம்
|
அபிநயம் .
|
|
நாடகியர்
|
கூத்தர் .
|
|
நாடல்
|
ஆராய்தல் .
|
|
நாடவர்
|
தேசத்தார் .
|
|
நாடறிவான்
|
நாடுகளை அறிபவனான சந்திரன் .
|
|
நாடன்
|
தேசத்தான் ; ஆளுந்தலைவன் ; குறிஞ்சி நிலத் தலைவன் ; கார்த்திகைநாள் .
|
|
நாடன்பருத்தி
|
ஒரு செடிவகை .
|
|
நாடா
|
நெசவுக்கருவிவகை ; நூற்பட்டை ; அணி வகை .
|
|
நாடி
|
நாட்டிலுள்ளவள் ; நாட்டையுடையவள் ; இரத்தக்குழாய் முதலியன ; மூச்சுக்குழாய் யாழின் நரம்பு ; உட்டொளை ; பூவின் தாள் ; நாழிகை ; மூக்கு ; மோவாய் ; மாளிகையின் மேற்பாகத்தோர் உறுப்பு ; சோதிடநூல் ; தாதுநரம்பு ; இலைநரம்பு .
|
|
நாடிகேளம்
|
காண்க : நாளிகேர(ள)ம் .
|
|
நாடிதாரணை
|
நாடிகளின் நாடைமுறை .
|
|
நாடிநரம்பு
|
நாடியோட்ட நரம்பு .
|
|
நாடிப்பரீட்சை
|
நாடியைச் சோதித்து அறிகை .
|
|
நாடிபார்த்தல்
|
தாது பார்த்தல் .
|
|
நாடிமண்டலம்
|
சூரியவீதி .
|
|
நாடியொடுங்குதல்
|
தாதுவின் ஒடுக்கம் ; ஊக்கமிழத்தல் .
|
|
நாடிவிழுதல்
|
தாதுவின் ஒடுக்கம் ; ஊக்கமிழத்தல் .
|
|
நாடு
|
நாட்டுப்பகுதி ; இடம் ; பூமி ; உலகம் ; நாட்டுப்புறம் ; மருதநிலம் ; பக்கம் ; இடப்பரப்பு ; பூவுலகப்பொது ; ஒரு பேரெண் .
|
|
நாடுசார்நிலம்
|
நாட்டின் பக்கத்திலுள்ள கழனி முதலியவை .
|
|
நாடுதல்
|
தேடுதல் ; ஆராய்தல் ; விரும்புதல் ; தெரிதல் ; ஒத்தல் ; அளத்தல் ; கிட்டுதல் ; நினைத்தல் ; மோப்பம்பிடித்தல் ; அளவு படுதல் .
|
|
நாடுபடுதிரவியம்
|
நாட்டிலுண்டாகும் பொருள்களான செந்நெல் , செவ்விளநீர் , சிறுபயறு , ஆனெய் , வாழை , கரும்பு .
|
|
நாடுபிடித்தல்
|
நாட்டை வென்று கைக்கொள்ளுதல் ; குத்தகையெடுத்தல் .
|
|
நாடுரி
|
ஒன்றரை நாழிகொண்ட முகத்தல் அளவை .
|
|
நாடேயன்
|
நாடகக் கணிகையின் மகன் .
|
|
நாடோடி
|
ஊர்சுற்றித் திரிபவன் ; நாட்டுக்குரியது ; சாதாரண வழக்கில் உள்ளது .
|
|
நாடோடிப்பேச்சு
|
வழக்குச்சொல் ; சாதாரணப் பேச்சில் வழங்கும் மொழி .
|
|
நாடோறும்
|
தினமும் .
|
|
நாண்
|
வெட்கம் ; மகளிர்க்குரிய கூச்சம் ; வில்நாண் ; கயிறு ; மாங்கலியங் கோத்த சரடு ; காண்க : அரைஞா(நா)ண் .
|
|
நாண்ஞாயிறு
|
காலை .
|
|
நாண்புடை
|
வில்லின் நாணொலி .
|
|
நாண்பூட்டுதல்
|
காண்க : நாணேற்றுதல் .
|
|
நாண்மகிழ்
|
நாளோலக்கம் .
|
|
நாண்மகிழிருக்கை
|
நாளோலக்கம் .
|
|
நாண்மங்கலம்
|
அறம் விளைக்கும் செங்கோலினையும் அருளினையும் விரும்பியோன் பிறந்த நாளின் சிறப்பைச் சொல்லும் புறத்துறை ; அரசற்கு யாண்டு இத்துணை சென்றது என்று எழுதும் மங்கலம் .
|
|
நாண்மதி
|
முழுநிலா .
|
|
நாண்மதியம்
|
முழுநிலா .
|
|
நாண்மலர்
|
அன்றலர்ந்த பூ .
|