| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
உபாசகை
|
பௌத்தருள் இல்லறத்தாள் .
|
|
உபாசங்கம்
|
காண்க : அம்பறாத்தணி .
|
|
உபாசனம்
|
ஆராதனை வழிபாடு ; வில்வித்தை .
|
|
உபாசனை
|
ஆராதனை வழிபாடு ; வில்வித்தை .
|
|
உபாசி
|
தெய்வ வழிபாட்டால் அருள் பெற்றவன் .
|
|
உபாசித்தல்
|
வழிபடுதல் .
|
|
உபாஞ்சு
|
ஏகாந்தம் ; இரகசியம் ; மந்தமாகச் செபித்தல் .
|
|
உபாத்தி
|
ஆசிரியன் , கற்பிப்போன் , புரோகிதன் .
|
|
உபாத்தியாயன்
|
ஆசிரியன் , கற்பிப்போன் , புரோகிதன் .
|
|
உபாத்தியாயினி
|
ஆசிரியை , கற்பிப்பவள் .
|
|
உபாதாயம்
|
பற்றப்படுவது .
|
|
உபாதாயவுரு
|
வலி , இரதம் , வன்னம் , சந்தம் என்னும் நால்வகைப்பட்ட உருவவகை
|
|
உபாதானகாரணம்
|
முதற்காரணம் .
|
|
உபாதானம்
|
முதற்காரணம் ; அரிசிப்பிச்சை ; அன்னதானம் ; ஐம்புலனடக்குகை ; பற்று .
|
|
உபாதி
|
கடமை ; வேதனை ; வாதை ; நோய் ; இடையூறு ; வருத்தம் ; தடை ; பாதை .
|
|
உபாதேயம்
|
ஏற்றுக்கொள்ளத்தக்கது .
|
|
உபாந்தியம்
|
கடைக்கண் ; ஈற்றயல் ; அண்மை .
|
|
உபாம்சு
|
ஏகாந்தம் ; மந்தமாகச் செபித்தல் ; தனது செவி கேட்க வாய்க்குட் செபிக்கை .
|
|
உபாயம்
|
வழி ; சூழ்ச்சி ; சொற்பம் ; அரசர்க்குரிய உபாயம் . அவை : இன்சொற் கூறல் , வேறுபடுத்தல் , ஈதல் , ஒறுத்தல் (சாமம் , பேதம் , தானம் , தண்டம் ) முறைகளால் செயல் முடித்தல் .
|
|
உபாயி
|
சூழ்ச்சியுள்ளவன் .
|
|
உபாலம்பனம்
|
இகழ்தல் , நிந்திக்கை .
|
|
உபானம்
|
கோபுரத்தின் அடிச் சித்திர வரிசை ; மிதியடி .
|
|
உபானவரி
|
கோபுரத்தின் அடிச் சித்திர வரிசை ; மிதியடி .
|
|
உபுக்குதல்
|
பெருகுதல் .
|
|
உபேட்சித்தல்
|
பொருட்படுத்தாமை ; வெறுத்துவிடுதல் ; கைவிடல் .
|
|
உபேட்சை
|
புறக்கணிப்பு ; அசட்டை ; அருவருப்பு .
|
|
உபேந்திரன்
|
இந்திரனுக்குத் தம்பி ,திருமால் .
|
|
உபோதம்
|
பேய்ப்பசளைக்கீரை , பேய்ப்பசளை .
|
|
உபோற்காதம்
|
தொடக்கம் , ஆரம்பம் ; பாயிரம் ; நூன்முகம் .
|
|
உம்
|
ஓரிடைச்சொல் , அசைநிலை ; விகுதி .
|
|
உம்கொட்டுதல்
|
உடன்படல் ; ஒப்புக்கொள்ளல் ; ' உம் 'மொலி எழுப்பிப் பிறர் கூறுவதைக் கேட்டல் .
|
|
உம்பர்
|
மேலிடம் ; வானம் ; தேவர் ; வானோர் ; தேவலோகம் ; உயர்ச்சி ; பார்ப்பார் .
|
|
உம்பரான்
|
உயர்ந்தோன் ; உயர்நிலையிருப்பவன் ; காமதேனு .
|
|
உம்பல்
|
வழித்தோன்றல் ; குலம் ; குடி ; ஆண்விலங்கு ; யானை ; எழுச்சி ; ஆணாடு ; வலிமை ; புதல்வன் ; முறைமை .
|
|
உம்பளம்
|
உப்பளம் ; மன்னனால் கிடைத்த பொருள் ; உதவி ; கொடை ; முற்றூட்டு ; மானியநிலம் .
|
|
உம்பன்
|
உயர்ந்தோன் ; கடவுள் .
|
|
உம்பி
|
உன் தம்பி .
|
|
உம்பிடிக்கோல்
|
நில அளவுகோல்வகை .
|
|
உம்பிளிக்கை
|
மானியம் , அரசனாற் கொடுக்கப்பட்ட இறையிலி நிலம் ; இலவசப் பொருள் .
|
|
உம்மச்சு
|
கம்பியிழுக்கும் சட்டம் .
|
|
உம்மாண்டி
|
பூச்சாண்டி ; வெருட்டுஞ்சொல் .
|
|
உம்மெனல்
|
சம்மதத்தைக் காட்டும் ஒலிக்குறிப்பு ; சினக்குறிப்பு ; ஓர் அனுகரண ஓசை .
|
|
உம்மை
|
' உம் ' என்னும் இடைச்சொல் ; முற்பிறப்பு ; வருபிறப்பு ; உங்களை ; மறுமை .
|
|
உம்மைத்தொகை
|
' உம் ' என்னும் இடைச்சொல் தொக்குவருந் தொடர் .
|
|
உமட்டியர்
|
நுளைச்சியர் , உப்பு விற்கும் மகளிர் , உமணச் சாதிப் பெண்மக்கள் .
|
|
உமண்
|
உமணர் , உப்பு விளைக்கும் சாதியர் .
|
|
உமண்பகடு
|
உப்பு வாணிகரது மூட்டை சுமந்து செல்லும் எருது .
|
|
உபவேட்டிதம்
|
கைவட்டணை நான்கனுள் ஒன்று , அபிநயவகை .
|
|
உபவேதம்
|
அப்பிரதான வேதம் ; நான்கு வேதங்களை அடுத்து மதிக்கப்பெறும் ஆயுர்வேதம் முதலிய நான்கு வேதங்கள் ; அவை : ஆயுர்வேதம் , தனுர்வேதம் , காந்தர்வவேதம் , அர்த்தவேதம் .
|
|
உபாக்கியானம்
|
கதை சொல்லுகை ; முற்காலத்திலே நிகழ்ந்ததை அறிவிக்கும் கதை ; கிளைக்கதை ; இதிகாசம் .
|
|
உபாகமம்
|
மூல ஆகமங்களின்வழித் தோன்றிய சைவ ஆகமங்கள் ; சார்பாகமம் , பழைய ஏற்பாட்டில் ஐந்தாவது புத்தகம் .
|
|
உபாகிதம்
|
உற்கை ; எரிகொள்ளி ; நெருப்பினால் வரும் அழிவு .
|
|
உபாங்கதாளம்
|
தாளவகை .
|
|
உபாங்கம்
|
சார்புறுப்பு ; வேதாகமங்களுக்கு அங்கமாகிய நூல்கள் ; மார்க்கத்துக்குரிய குறி ; ஒருவகைத் தோற்கருவி ; பக்க வாத்தியம் ; உபாங்க தாளம் .
|
|
உபாங்கராகம்
|
ஒரு பண்வகை .
|
|
உபாசகன்
|
உபாசனை செய்வோன் ; தெய்வ வழிபாடு உடையவன் ; பௌத்தருள் இல்லறத்தான் .
|