| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
உபதாளம்
|
ஐந்து சிறுதாளங்கள் ; ஆதி தாளம் : பார்வதி லோசனம் , குடுக்கம் , சிங்கநந்தம் , திரிமாத்திரை .
|
|
உபதானம்
|
துணைக் காரணம் ; அடிப்படை ; கடமை ; தலையணை ; நோன்பு .
|
|
உபதி
|
சக்கரத்தின் ஆரம் ; அச்சம் ; வஞ்சனை .
|
|
உபதிருட்டன்
|
உடனிருந்து பார்ப்பவன் ; புரோகிதன் .
|
|
உபதேசகலை
|
ஆகமவளவைவகை மூன்றனுள் ஒன்று , மத தத்துவ போதனைமுறை .
|
|
உபதேசம்
|
கடவுளின் தன்மையைக் கூறுதல் , சமயபோதகம் , ஞான போதனை ; சமயாசார உபதேசம் : மந்திரோபதேசம் : நன்மை கூறல் ; புத்தி புகட்டல் ,
|
|
உபதேசி
|
போதகன் , குரு .
|
|
உபதேசித்தல்
|
போதித்தல் ; மந்திரத்தை அறிவுறுத்தல் .
|
|
உபதேசியார்
|
உபபோதகர் .
|
|
உபதை
|
அமைச்சர் முதலியோரை அமர்த்துவதற்குமுன் அரசன் செய்யுஞ் சோதனை ; அறவுபதை , பொருளுபதை , இன்பவுபதை , அச்சவுபதை ; ஒருவன் மன இயல்பை ஆராய்ந்து தெளிதல் ; தணிக்கை ; ஈற்றயலெழுத்து ; பரிதானம் ; காணிக்கை .
|
|
உபநதி
|
பேராற்றில் வந்துவிழும் சிற்றாறு .
|
|
உபநயம்
|
அடைதல் ; அனுமான உறுப்புகள் ஐந்தனுள் ஒன்று ; கொண்டுவருதல் ; பூணூல் தரிக்கும் சடங்கு .
|
|
உபநயனம்
|
பூணூல் தரிக்கும் சடங்கு , பூணூல் கலியாணம் ; மூக்குக்கண்ணாடி ; வழிநடத்துதல் .
|
|
உபநாகம்
|
புண்ணுக்கிடும் மருந்து ; புண்கட்டிகளில் வைத்துக் கட்டும் மா முதலியன .
|
|
உபநாயம்
|
புண்ணுக்கிடும் மருந்து ; புண்கட்டிகளில் வைத்துக் கட்டும் மா முதலியன .
|
|
உபநிட்கிராமணம்
|
பிறந்த நான்காமாதம் பிள்ளையை முதன்முதல் வெளிக்கொண்டு செல்லும் சடங்கு .
|
|
உபநிடதம்
|
வேத நுட்பம் , வேதத்தின் ஞான காண்டம் ; வேதம் ; தருமம் ; மறைபொருள் .
|
|
உபநிடம்
|
வேத நுட்பம் , வேதத்தின் ஞான காண்டம் ; வேதம் ; தருமம் ; மறைபொருள் .
|
|
உபசத்தி
|
ஒன்றாந்தன்மை , ஐக்கியம் ; உதவி ; ஈகை ; ஊழியம் .
|
|
உபசந்தி
|
சந்தி வேளைக்குச் சற்று முந்தின காலம் .
|
|
உபசம்மாரம்
|
காண்க : உபசங்காரம் .
|
|
உபசமனம்
|
அமைதி .
|
|
உபசமித்தல்
|
உபசாந்தமடைதல் .
|
|
உபசயசரீரம்
|
பருவுடல் .
|
|
உபசர்க்கம்
|
காண்க : உபசருக்கம் ; நோய்வகை ; துன்பம் .
|
|
உபசரணை
|
உபசாரம் ; வழிபாடு .
|
|
உபசரித்தல்
|
வழிபாடு செய்தல் ; மரியாதை செய்தல் .
|
|
உபசருக்கம்
|
வடமொழி முதனிலையடை ; ஆரிய மொழிகளின் அடையுருபு , பெயர் வினைகளுக்கு முன்வரும் இடைச்சொல் .
|
|
உபசல்லியம்
|
ஊரின் அண்மை ; புலைச்சேரி , பறையர் சேரி .
|
|
உபசாகை
|
கிளையிலுள்ள கிளை , சிறு கிளை : உட்பிரிவு .
|
|
உபசாந்தம்
|
மனவமைதி ; தணிகை ; ஓய்வு ; அருள் .
|
|
உபசாந்தி
|
மனவமைதி ; தணிகை ; ஓய்வு ; அருள் .
|
|
உபசாபம்
|
வேறுபாடு ; துரோகம் ; ஒற்றுமையின்மை .
|
|
உபசாரக்கை
|
இரண்டு கைகளையுங் குவித்து மார்போடணைத்து உபசாரமாகக் காட்டும் இணைக்கைவகை .
|
|
உபசாரகன்
|
மரியாதை செய்வோன் .
|
|
உபசாரஞ் சொல்லுதல்
|
முகமன் கூறுதல் ; துக்கம் விசாரித்தல் .
|
|
உபசாரபத்திரம்
|
ஒருவரைப் போற்றிப் படித்துக் கொடுக்கும் பாராட்டு இதழ் .
|
|
உபசாரம்
|
மரியாதை ; புகழ்மொழி ; வாழ்த்து ; உபசார வழக்கு ; ஊழியம் ; வழிபாடு ; காண்க : உபசாரவழக்கு ; போற்றுகை ; உதவி ; சேவை ; காணிக்கை .
|
|
உபசாரம்கேட்டல்
|
துக்கம் வினாவல் .
|
|
உபசாரவசனம்
|
புகழ்மொழி .
|
|
உபசாரவழக்கு
|
ஒன்றன் தன்மையை மற்றொன்றன்மேல் ஏற்றிக் கூறுவது .
|
|
உபசாரன்
|
காண்க : உபசாரகன் .
|
|
உபசாரி
|
காண்க : உபசாரகன் .
|
|
உபசாரிகம்
|
காண்க : உபசாரவழக்கு .
|
|
உபசீவனம்
|
பிறரைக் சார்ந்து வாழ்கை ; வாழ்க்கைக்குரிய பொருள் .
|
|
உபசீவித்தல்
|
உயிர் பிழைத்தல் ; பிறரையோ பிறிதொன்றையோ சார்ந்திருத்தல் .
|
|
உபசுருதி
|
இரவிலே கேட்கும் வானொலி .
|
|
உபத்தம்
|
பிறப்புறுப்பு ; பெண்குறி .
|
|
உபத்தாயம்
|
உபாயம் ; தவறு ; துன்பம் .
|
|
உபத்தானம்
|
சந்தியாவந்தன முடிவில் செய்யும் மந்திரத் துதி .
|
|
உபத்திரம்
|
இடுக்கண் , துன்பம் , வேதனை ; கொடுமை ; தொந்தரவு ; வருத்தம் ; வலுக்கட்டாயம் .
|
|
உபத்திரவம்
|
இடுக்கண் , துன்பம் , வேதனை ; கொடுமை ; தொந்தரவு ; வருத்தம் ; வலுக்கட்டாயம் .
|
|
உபதாது
|
பொன் முதலிய உலோகங்களைப் போலப் தோற்றமளிக்கும் தாழ்ந்த ஏழு உலோகங்கள் : சுவர்ணமாட்சிகம் : தாரமாட்சிகம் , துத்தம் , காஞ்சியம் , ரீதி , சிந்தூரம் , சிலாசத்து .
|