| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
அலைத்தல்
|
அசைத்தல் ; அலையச் செய்தல் ; நீரைக் கலக்குதல் ; வருத்துதல் ; அடித்தல் ; நிலைகெடுத்தல் ; உருட்டுதல் ; அலைமோதுதல் .
|
|
அலைத்திடல்
|
காண்க : அலைத்தல் .
|
|
அலைதரல்
|
அலைதல் ; அலையச் செய்தல் .
|
|
அலைதல்
|
திரிதல் ; வருந்துதல் ; சோம்புதல் ; ஆடுதல் .
|
|
அலைதாங்கி
|
அலையைத் தடுக்கும் செய்கரை .
|
|
அலைதாடி
|
ஆடுமாடுகளின் கழுத்தில் புடைத்துத் தொங்கும் தசை .
|
|
அலைநீர்
|
கடல் .
|
|
அலைப்படுதல்
|
வருந்துதல் .
|
|
அலைப்பு
|
அசைக்கை ; வருத்தம் .
|
|
அலைமகள்
|
திருமகள் .
|
|
அலையல்
|
திரிகை ; சோர்வு ; சோம்பல்
|
|
அலைவாய்
|
கடல் ; திருச்செந்தூர் .
|
|
அலைவு
|
அசைகை ; கலக்கம் .
|
|
அலோகம்
|
காணப்படாத உலகம் .
|
|
அலௌகிகம்
|
உலகநடைக்கு மாறானது .
|
|
அவ்
|
சுட்டுச்சொல் ; அவை .
|
|
அவ்வது
|
அவ்வாறு .
|
|
அவ்வாய்
|
அழகிய இடம் .
|
|
அவ்வாறு
|
அப்படி ; தனித்தனி ஆறு .
|
|
அவ்விடம்
|
அங்கு .
|
|
அவ்வித்தல்
|
பொறுமை இழத்தல் ; மனம் கோணச்செய்தல் .
|
|
அவ்விதழ்
|
அழகிய பூவிதழ் .
|
|
அவ்வியக்தம்
|
அறியப்படாத எண் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; மூலப்பிரகிருதி ; பீடத்தோடுகூடிய சிவலிங்கம் ; ஆன்மா .
|
|
அவ்வியத்தம்
|
அறியப்படாத எண் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; மூலப்பிரகிருதி ; பீடத்தோடுகூடிய சிவலிங்கம் ; ஆன்மா .
|
|
அலவாங்கு
|
கடப்பாரை .
|
|
அலவாட்டு
|
வழக்கம்
|
|
அலவான்
|
பல்லாங்குழியாட்டத்தில் கூடும் காய்கள் .
|
|
அலவு
|
மனத்தடுமாற்றம் .
|
|
அலவுதல்
|
வருந்துதல் ; சிந்துதல் .
|
|
அலவை
|
அல்லவை ; விடாது பிதற்றுபவள் ; விபச்சாரம் .
|
|
அலற்றுதல்
|
இடைவிடாமலும் முறையில்லாமலும் பேசுதல் .
|
|
அலறல்
|
புலம்புதல் , கதறுதல் .
|
|
அலறுதல்
|
அலறல் ; மிக்கொலித்தல் ; மாடு , ஆந்தை முதலியன கதறுதல் ; உரத்தழுதல் ; வருந்துதல் ; விரிதல் ; காய்தல் .
|
|
அலன்
|
கலப்பைப் படையையுடைய பலராமன் .
|
|
அலன்றல்
|
சாவு .
|
|
அலாதம்
|
கடைக்கொள்ளி ; மரம்சுட்ட கரி .
|
|
அலாதி
|
தனியானது .
|
|
அலாது
|
தனியானது .
|
|
அலாபத்திரம்
|
இணையா வினைக்கை வகை .
|
|
அலாபம்
|
இலாபமின்மை ; தீது .
|
|
அலாயுதன்
|
காண்க : அலன் .
|
|
அலாரிதா
|
அலரிச்செடி .
|
|
அலாரிப்பு
|
நாட்டிய ஆரம்பத்தில் பாடும் சொற்கட்டு .
|
|
அலாவு
|
சுரைக்கொடி .
|
|
அலி
|
ஆண்பெண் அல்லாதது ; பலராமன் ; யமன் ; உழவன் ; காகம் ; குயில் ; தேன் ; விருச்சிகராசி ; நறுவிலிமரம் ; வயிரம் இல்லாமரம் ; தீ ; சோறு .
|
|
அலிக்கிரகம்
|
சனி , புதன் என்னுங் கோள்கள் ,
|
|
அலிக்கை
|
அலிச்செயல் காட்டும் அபிநயக்கை .
|
|
அலிகம்
|
நெற்றி .
|
|
அலிப்பேடு
|
அல்லியம் என்னும் கூத்து .
|
|
அலிபகம்
|
கருவண்டு ; தேள் ; நாய் .
|
|
அலிமரம்
|
வயிரமில்லாத மரம் ; பாலும் நாரும் முள்ளும் உள்ள மரம் .
|
|
அலியன்
|
கடுக்காய்மரம் .
|
|
அலியெழுத்து
|
ஆய்தவெழுத்து .
|
|
அல¦கன்
|
தலை .
|
|
அலுக்குத்து
|
முகமதியப் பெண்கள் காதணி .
|
|
அலுக்குதல்
|
சிறிது அசைத்தல் ; பிலுக்குப்பண்ணல் ; பகட்டித் திரிதல் ; ஆடம்பரங்காட்டி மயக்குதல் .
|
|
அலுசிலும்பல்
|
குழப்பம் .
|
|
அலுப்தசத்தி
|
பேரருளுடைமை .
|
|
அலுத்தசத்தி
|
பேரருளுடைமை .
|
|
அலுத்தல்
|
சோர்தல் ; தளர்தல் ; களைத்தல் .
|
|
அலுத்தன்
|
பற்றற்றவன் .
|
|
அலுப்பு
|
தளர்வு ; சோர்வு ; களைப்பு .
|
|
அலுவல்
|
தொழில் .
|
|
அலுவீகம்
|
வில்வமரம் .
|
|
அலேகம்
|
எழுதப்படாத வெள்ளேடு ; உலோகமணல் .
|
|
அலை
|
நீர்த்திரை ; கடல் ; திரையடித்தொதுக்கிய கருமணல் ; நிலம் ; மது ; கண்டனம் ; வருத்துகை ; மிகுதி ; கொலை .
|
|
அலைக்கழித்தல்
|
அலைத்து வருத்துதல் .
|
|
அலைக்கழிதல்
|
அலைந்து வருந்துதல் .
|
|
அலைக்கழிவு
|
உலைவு ; அலைந்து வருந்தும் வருத்தம் .
|
|
அலைகாற்று
|
பெருங்காற்று .
|
|
அலைகுலையாக்குதல்
|
நிலைகுலையச் செய்தல் .
|
|
அலைச்சல்
|
திரிகை ; தொந்தரவு .
|
|
அலைசடி
|
சோர்வு .
|
|
அலைசடை
|
சோர்வு .
|
|
அலைசல்
|
அலைகை ; துன்பம் ; சோம்பல் .
|
|
அலைசுதல்
|
ஆடை முதலியவற்றை நீரில் அலைத்துக் கழுவுதல் ; குலுக்குதல் ; கலக்குதல் ; சோம்புதல் .
|
|
அலைசோலி
|
அலைச்சல் ; தொந்தரவு .
|