| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
காயக்கிலேசம்
|
உடலை வருத்தி யொடுக்குகை .
|
|
காயக்குத்தகை
|
நிலையான குத்தகை ஏற்பாடு .
|
|
காயகம்
|
இசை மோகமயக்கம் ; வாணிகம் .
|
|
காயகற்பம்
|
உடல் நீடித்திருக்க உண்ணும் மருந்து .
|
|
காயகன்
|
இசைபாடுவோன் ; மயக்குவோன் .
|
|
காயங்கட்டுதல்
|
புண்ணுக்கு மருந்திட்டுக் கட்டுதல் .
|
|
காயசன்னி
|
காயம்பட்டதனால் உண்டாகும் இரணசன்னி .
|
|
காயசித்தி
|
உடலை நெடுநாள் இருக்கச் செய்யும் வித்தை ; அணிமா , மகிமா முதலிய சித்திகள் ; பொன்னாங்காணி .
|
|
காயசித்திக்கடியான்
|
காந்தக்கல் .
|
|
காயசித்திச் சுண்ணம்
|
கருப்பூரச் சிலாசத்து .
|
|
காயசித்தியானோன்
|
உடல் நீடித்திருக்கப் பெற்றவன் ; சூதபாடாணம் .
|
|
காயசித்தியுப்பு
|
அமரியுப்பு
|
|
காயடித்தல்
|
விதையடித்தல் .
|
|
காமுருகி
|
ஓணான் .
|
|
காமுறுதல்
|
விரும்புதல் ; வேண்டிக்கொள்ளுதல் .
|
|
காமோத்தீபகம்
|
காமத்தை மிகுவிக்கும் பொருள் .
|
|
காய்
|
முதிர்ந்து பழுக்காத மரஞ்செடிகளின் பலன் ; மூவகைச்சீரின் இறுதியிலுள்ள நேரசை ,காய்ச்சீர் ; பழுக்காத புண்கட்டி ; முதிராது விழுங் கரு ; பயனின்மை ; வஞ்சனை விதை ; சொக்கட்டான்காய் ; பக்குவப்படாத விளை பொருள்கள் .
|
|
காய்க்கடுக்கன்
|
உருத்திராட்சம் வைத்துக் கட்டிய கடுக்கன் .
|
|
காய்க்கறியமுது
|
கடவுட்குப் படைக்குங் கறி .
|
|
காய்க்கும்பருவம்
|
காய் தோன்றுங் காலம் ; பிள்ளைபெறும் பருவம் .
|
|
காய்கறி
|
உணவுக்குரிய மரக்கறிகள் .
|
|
காய்ங்கனி
|
காயும் கனியும் .
|
|
காய்ச்சல்
|
உலர்ச்சி ; சுரநோய் ; மனவெரிச்சல் ; வெப்பம் .
|
|
காய்ச்சல்காரன்
|
சுரமுள்ளவன் ; பணம் வறண்வன் ; பொறாமையால் மனவெரிச்சல் உள்ளவன் .
|
|
காய்ச்சற்பாடாணம்
|
பிறவிப் பாடாணங்களுள் ஒன்று .
|
|
காய்ச்சற்பாடு
|
தவசத்தின் நன்றாகக் காய்ந்த நிலை ; நெல் முதலியன உலர்த்துதலால் உண்டாகும் அளவுக்குறைவு ; பொருளிழந்து ஏங்கிநிற்கும் நிலை .
|
|
காய்ச்சி
|
துவரை .
|
|
காய்ச்சிரக்கு
|
புளிச்சைக்கீரை .
|
|
காய்ச்சீர்
|
நேரீற்று மூவசைச் சீர் .
|
|
காய்ச்சுக்கட்டி
|
காசுக்கட்டி .
|
|
காய்ச்சுக்கல்
|
போலி இரத்தினம் .
|
|
காய்ச்சுக்குப்பி
|
திராவகம் காய்ச்சி இறக்கும் குப்பி .
|
|
காய்ச்சுண்டை
|
காசுக்கட்டி .
|
|
காய்ச்சுப்பு
|
சவட்டுப்பு ; உவர்நீரைக் காய்ச்சியெடுக்கும் உப்பு .
|
|
காய்ச்சுமண்
|
வளையல் செய்தற்குரிய மணல் .
|
|
காய்ச்சுரை
|
புடமிட்ட பொன் ; புளிச்சைக்கீரை .
|
|
காய்ச்சுறுக்கு
|
புளிச்சைக்கீரை .
|
|
காய்த்தல்
|
மரஞ்செடி முதலியன காய்களை உண்டாக்குதல் .
|
|
காய்த்தானியம்
|
முதிரை ; கதிர்த்தானியம் ; முசுக்கட்டை .
|
|
காய்த்துதல்
|
எரியச்செய்தல் ; சினத்தல் ; காய்ச்சுதல் .
|
|
காய்த்தும்பை
|
கறித்தும்பை .
|
|
காய்தல்
|
உலர்தல் ; சுடுதல் ; மெலிதல் ; வருந்தல் ; விடாய்த்தல் ; வெயில்நிலாக்கள் எறித்தல் ; எரித்தல் ; அழித்தல் ; விலக்குதல் ; வெறுத்தல் ; வெகுளுதல் ; கடிந்துகூறுதல் ; வெட்டுதல் .
|
|
காய்நீர்
|
வெந்நீர் .
|
|
காய்ப்பழம்
|
முழுதும் பழுக்காத பழம் .
|
|
காய்ப்பறங்கி
|
கோழிக்கு வரும் நோய்களுள் ஒன்று .
|
|
காய்ப்பனை
|
சாறு எடுக்காத பெண்பனை .
|
|
காய்ப்பு
|
வெறுப்பு ; மட்டமான இரும்பு ; மரஞ்செடி முதலியன பலன் தருதல் ; தோலின் தடிப்பு ; தழும்பு .
|
|
காய்ப்புமரம்
|
காய்களுள்ள மரம் .
|
|
காய்பசி
|
மிக்க பசி .
|
|
காய்ம்பனை
|
காய்க்கும் பனை .
|
|
காய்ம்பாளை
|
பெண்பனையின் பாளை .
|
|
காய்மகாரம்
|
பொறாமை , எரிச்சல் .
|
|
காய்மடி
|
பசுவின் வன்முலை .
|
|
காய்மரம்
|
காண்க : காய்ப்புமரம் .
|
|
காய்மை
|
பொறாமை .
|
|
காய்மைகரித்தல்
|
பொறாமைப்படுதல் .
|
|
காய்மைகாரி
|
பொறாமைப்பட்டவன்(ள்) .
|
|
காய்வள்ளி
|
ஒரு வகை வள்ளிக்கொடி , காட்டுவள்ளி ; சீரகவள்ளி ; வெற்றிலைவள்ளி ; கிழங்குவகை .
|
|
காய்வாழை
|
நிறையக் காய்க்கும் வாழை வகை .
|
|
காய்விழுதல்
|
கருச்சிதைந்து வெளிப்படுதல் .
|
|
காயக்கம்
|
மோகமயக்கம் .
|
|
காயக்கரணம்
|
உறுப்பினாற் செய்யும் அபிநயம் .
|