| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
வறைமுறுகல்
|
கருகிப்போனது ; பயனற்றது ; கரடுமுரடானது .
|
|
வறையல்
|
காண்க : வறை ; பிண்ணாக்கு .
|
|
வறையோடு
|
பொரிக்குஞ் சட்டியோடு ; பயனற்றவர் ; பயனற்றது .
|
|
வன்கண்
|
மனக்கொடுமை ; வீரத்தன்மை ; பகைமை ; பொறாமை ; கொடும்பார்வை .
|
|
வன்கண்ணன்
|
கொடுமையுள்ளவன் ; வீரமுள்ளவன் .
|
|
வன்கண்மை
|
கொடுமை ; வீரம் .
|
|
வன்கணம்
|
காண்க : வல்லினம் .
|
|
வன்கணாளன்
|
கொடியோன் ; வீரன் .
|
|
வன்கனி
|
செங்காய் .
|
|
வன்காய்
|
கடுக்காய் ; முற்றிய காய் .
|
|
வன்காரம்
|
வெண்காரம் ; வலாற்காரம் .
|
|
வன்கிழம்
|
தொண்டுகிழம் ; மிக்க இளமையிலே உண்டாகும் அறிவுமுதிர்ச்சி .
|
|
வன்கை
|
வலிய கரம் ; தோற்கருவிவகை .
|
|
வன்கொலை
|
கடுங்கொலை .
|
|
வன்சிறை
|
கடுங்காவல் ; மதில் ; கொடுமைக்கு உள்ளாக்கும் அடிமைத்தனம் .
|
|
வன்செலல்
|
விரைந்துசெல்லுகை .
|
|
வன்செவி
|
உணர்ச்சியற்ற காது .
|
|
வன்சொல்
|
கடுஞ்சொல் ; மிலேச்சமொழி .
|
|
வன்பகை
|
கடும்பகை .
|
|
வன்பாடு
|
வலியதன்மை ; முருட்டுத்தன்மை .
|
|
வன்பார்
|
இறுகிய பாறைநிலம் .
|
|
வன்பால்
|
காண்க : வன்பார் ; பாலைநிலம் ; குறிஞ்சிநிலம் ; மேடு .
|
|
வன்பு
|
வலிமை ; கடினத்தன்மை ; கருத்து ; தோல் முதலியவற்றின் வார் .
|
|
வன்புல்
|
புறக்காழுள்ள மரஞ்செடி முதலியன .
|
|
வன்புலம்
|
வலியநிலம் ; குறிஞ்சிநிலம் ; முல்லைநிலம் .
|
|
வன்புறுத்தல்
|
தலைவியைத் தலைவன் ஆற்றுவித்தல் .
|
|
வன்புறை
|
தலைவியைத் தலைவன் ஆற்றி வற்புறுத்துகை ; தலைவன் பிரிவின்கண் வாயில்கள் தலைவியை ஆற்றுவித்தலைக்கூறும் அகத்துறை ; வற்புறுத்திச் சொல்பவன் .
|
|
வன்புறையெதிரழிதல்
|
தலைவன் ஆற்றுவித்துப் பிரிந்தபின் தனிமையில் தலைவி வருந்துதலைக்கூறும் அகத்துறை .
|
|
வன்பொறை
|
பெரும்பாரம் .
|
|
வன்மம்
|
தீராப்பகை ; வலிமை ; சூளுரை ; உடலின் முக்கிய பாகம் ; இரகசியச் சொல் .
|
|
வன்மரம்
|
அகக்காழுள்ள மரம் .
|
|
வன்மனம்
|
கன்னெஞ்சு .
|
|
வன்மா
|
குதிரை ; அரிமா .
|
|
வன்மான்
|
அரிமா .
|
|
வன்மி
|
பகைவன் .
|
|
வன்மித்தல்
|
கன்னெஞ்சு படைத்தல் ; தீராப்பகை காட்டுதல் ; சூளுரைத்தல் ; மரம் காழ் கொள்ளுதல் .
|
|
வன்மீகம்
|
கறையான்புற்று ; ஒருவகை உடல்வீக்கநோய் .
|
|
வன்மீன்
|
முதலை .
|
|
வன்மீனம்
|
முதலை .
|
|
வன்மை
|
வலிமை ; கடினம் ; வன்சொல் ; ஆற்றல் ; வலாற்காரம் ; சொல் அழுத்தம் ; கோபம் ; கருத்து ; வல்லெழுத்து .
|
|
வன்மொழி
|
கடுஞ்சொல் .
|
|
வன்றி
|
பன்றி .
|
|
வன்னசரம்
|
பலவகை மணிகளினாலியன்ற கழுத்தணிவகை .
|
|
வன்னம்
|
நிறம் ; எழுத்து ; தங்கம் .
|
|
வன்னரூபி
|
உமை ; கலைமகள் .
|
|
வன்னனை
|
காண்க : வருணனை .
|
|
வன்னி
|
நெருப்பு ; குதிரை ; வன்னிமரம் ; காண்க : கொடிவேலி ; தணக்கு ; வன்னியன் ; பிரமசாரி ; கிளி .
|
|
வன்னிகை
|
எழுதுகோல் .
|
|
வன்னிசகாயன்
|
நெருப்புக்குத் துணையாகிய காற்று .
|
|
வன்னித்தல்
|
வண்ணம்வைத்தல் ; வருணித்தல் .
|
|
வன்னிமன்றம்
|
வன்னிமரமுள்ள பொதுவிடம் .
|
|
வன்னியம்
|
வருணிக்கப்பட்டது ; சிற்றரசரின் தன்மை ; சுதந்தரம் ; பகைமை .
|
|
வன்னியமறுத்தல்
|
சிற்றரசரை அழித்தல் .
|
|
வன்னியன்
|
சாமந்தன் ; ஒரு சாதியாரின் பட்டப்பெயர் .
|
|
வன்னிலம்
|
பாறைப்பாங்கான பூமி .
|
|
வன்னிவகன்
|
தீயைத் தாங்குபவனாகிய காற்று .
|
|
வன்னிவண்ணம்
|
செந்தாமரை ; செவ்வாம்பல் .
|
|
வன்னெஞ்சு
|
கடுமையான மனம் .
|
|
வனகவம்
|
காட்டுப்பசு .
|
|
வனச்சார்பு
|
காட்டுப்பாங்கான முல்லைநிலம் .
|
|
வனச்சுவை
|
நரி ; புலி ; புனுகுபூனை .
|
|
வனசஞ்சாரம்
|
காட்டிலே திரிந்துவாழ்கை .
|
|
வனசந்தனம்
|
வண்டுகொல்லி ; மரவகை .
|
|
வனசம்
|
தாமரை .
|
|
வனசமூகம்
|
பூஞ்சோலை .
|
|
வனசரம்
|
காட்டுவிலங்கு ; காட்டானை ; காடு .
|
|
வனசரர்
|
பாலைநில மக்கள் ; வேடர் .
|
|
வனசரிதன்
|
காண்க : வனவாசி .
|
|
வனசன்
|
காமன் .
|
|
வனசுரம்
|
பாலைநிலம் .
|
|
வனசை
|
திருமகள் ; சந்தனமரம் .
|