| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
யாப்பு
|
கட்டுகை ; கட்டு ; செய்யுள் ; யாழ்ப்பத்தரிற் குறுக்கே வலிவுறச் செய்யுங் கட்டு ; சிறப்புப்பாயிர இலக்கணம் பதினொன்றனுள் இன்ன நூல் கேட்டபின் இன்னது கேட்கத் தக்கதென்னும் தொடர்பு ; அன்பு ; உறுதி ; சூழ்ச்சி ; பொருத்தம் ; பாம்பு .
|
|
யாப்புறவு
|
தள்ளத்தகாத நியதி ; தகுதி .
|
|
யாப்புறுத்தல்
|
வலியுறுத்தல் .
|
|
யாப்புறுதல்
|
பொருள் நிரம்பியிருத்தல் ; ஏற்புடையதாதல் ; ஈட்டுதல் .
|
|
யாபனம்
|
பொழுதுபோக்குதல் ; இகழுதல் ; தாமதிக்கை .
|
|
யாபித்தல்
|
பொழுதுபோக்குதல் ; நுகர்தல் ; கவர்தல் .
|
|
யாம்
|
தன்மைப் பன்மைப் பெயர் .
|
|
யாமக்கோட்டம்
|
அந்தப்புரம் .
|
|
யாமகோடம்
|
சேவல் ; நாழிகைவட்டில் .
|
|
யாமங்கொள்பவர்
|
ஊர்காவலர் ; நாழிகைக் கணக்கர் .
|
|
யாமசரிதன்
|
இரவில் திரிபவனான அரக்கன் .
|
|
யாமபதி
|
சந்திரன் .
|
|
யாமபேரி
|
இரவில் ஒவ்வொரு சாமத்தின் தொடக்கத்திலும் கொட்டும் பேரிகை .
|
|
யாமம்
|
நள்ளிரவு ; சாமம் ; இரவு ; இடக்கை மேளம் ; மாலைப்பொழுதின் பின் பத்து நாழிகை ; அகலம் ; தெற்கு .
|
|
யாமயாழ்
|
நள்ளிரவில் மீட்டும் யாழ் .
|
|
யாமவதி
|
இரவு .
|
|
யாமளபுராதனர்
|
காளியின் படைவீரர் .
|
|
யாமளம்
|
காளியைத் தெய்வமாகக் கொண்ட ஒரு வேதம் ; இரட்டை ; பச்சை ; இளமை .
|
|
யாமளை
|
பார்வதி ; காளி .
|
|
யாமி
|
இராத்திரி ; யமன்தேவி ; கற்புடையாள் ; உடன்பிறந்தாள் ; தெற்கு ; மகள் ; மருமகள் .
|
|
யாமிகன்
|
இரவில் நகரைக் காக்கும் காவற்காரன் .
|
|
யாமியம்
|
தெற்கு ; சந்தனம் ; தவம் .
|
|
யாமினி
|
மூன்று யாமங்களையுடைய இரவு .
|
|
யாமுனம்
|
அஞ்சனக்கல் .
|
|
யாமை
|
ஆமை ; இரவு ; காண்க : யாழ்பதங்காளி ; தெற்கு .
|
|
யாமைமணை
|
ஆமையின் வடிவமைந்த ஓர் இருக்கை .
|
|
யாய்
|
தாய் .
|
|
யார்
|
யாவர் ; காண்க : நத்தைச்சூரி .
|
|
யாரள்
|
காண்க : யாவள் .
|
|
யாரி
|
கதவு ; கள்ளக்கணவன் ; எதிரி .
|
|
யாரும்
|
எவரும் .
|
|
யாலம்
|
ஆச்சாமரம் ; இரவு .
|
|
யாவகம்
|
செம்பஞ்சு ; காண்க : பெரும்பயறு .
|
|
யாவண்
|
எவ்விடம் .
|
|
யாவது
|
எது ; எவ்விதம் .
|
|
யாவதும்
|
சிறிதும் ; காண்க : யாவும் .
|
|
யாவர்
|
எவர் .
|
|
யாவரும்
|
எல்லோரும் .
|
|
யாவள்
|
எவள் .
|
|
யாவன்
|
எவன் .
|
|
யாவும்
|
எல்லாம் .
|
|
யாவை
|
எவை .
|
|
யாழ்
|
பேரியாழ் , சகோடயாழ் , மகரயாழ் , செங்கோட்டியாழ் என்னும் நால்வகை நரம்புக் கருவி ; மிதுனராசி ; அசுவினிநாள் ; திருவாதிரை நாள் ; பண் ; ஆந்தை .
|
|
யாழ்க்கரணம்
|
யாழ்மீட்டற்குரிய செய்கை .
|
|
யாழ்செய்தல்
|
பாடுதல் .
|
|
யாழ்த்திறம்
|
பண் ; ஐந்து சுரமுள்ள இசை .
|
|
யாழ்தரித்தாள்
|
பார்வதிதேவி .
|
|
யாழ்ப்பாணர்
|
யாழ்மீட்டும் பாணர் வகையினர் ; யாழ்ப்பாண நாட்டார் .
|
|
யாழ்பதங்காளி
|
செவ்வழி யாழ்த்திறத்துள் ஒன்று .
|
|
யாழ்முனிவர்
|
நாரதர் .
|
|
யாழ்வல்லோர்
|
காண்க : யாழோர் .
|
|
யாழ
|
ஒரு முன்னிலை யசைச்சொல் .
|
|
யாழல்
|
கறையான் .
|
|
யாழோர்
|
கந்தருவர் .
|
|
யாழோர்கூட்டம்
|
எண்வகை மணத்துள் ஒன்றான கந்தருவமணம் .
|
|
யாழோர்மணவினை
|
எண்வகை மணத்துள் ஒன்றான கந்தருவமணம் .
|
|
யாளி
|
யானையின் துதிக்கையும் சிங்கத்தின் முகமுமுடைய விலங்கு ; அரிமா ; சிம்மராசி ; யானை ; இறைகூடைவகை .
|
|
யாளியூர்தி
|
யாளியை ஊர்தியாக உடைய காளி .
|
|
யாற்றுநீர்
|
அடிதொறும் ஆற்றுநீர் ஒழுக்குப் போல நெறிப்பட்டு அற்றுஅற்று ஒழுகுவதான எண்வகைப் பொருள்கோளுள் ஒன்று .
|
|
யாறு
|
ஆறு .
|
|
யான்
|
தன்மை யொருமைப் பெயர் .
|
|
யான்மை
|
அகங்காரம் .
|
|
யானஞ்செய்தல்
|
செல்லுதல் .
|
|
யானம்
|
ஊர்தி ; சிவிகை ; மரக்கலம் ; போர்ச்செலவு ; அறைவீடு ; கள் .
|
|
யானெனதெனல்
|
தன்முனைப்பும் பற்றுடைமையும் வெளிப்படப் பேசுதல் .
|
|
யானை
|
துதிக்கையுடைய விலங்குவகை ; ஆனை மரம் .
|
|
யானைக்கச்சை
|
யானையின் கழுத்திலிடும் கயிறு .
|