| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
ஆரோபித்தல்
|
ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் .
|
|
ஆரோபிதம்
|
ஏற்றப்பட்டது ; கற்பிக்கப்பட்ட குற்றம்
|
|
ஆல்
|
அகற்சட்டி ; மரவகை ; நீர் ; வெள்ளம் ; கார்த்திகை ; நஞ்சு ; ஆமெனல் ; வியப்பு ; இரக்கம் ; தேற்றம் இவற்றைக் குறிக்கும் இடைச்சொல் ; ஓர் அசைநிலை ; மூன்றாம் வேற்றுமையுருபு ; தொழிற்பெயர் விகுதி ; எதிர்மறை வியங்கோள் விகுதி ; எதிர்கால வினையெச்ச விகுதி .
|
|
ஆல்வாட்டுதல்
|
சிறிது காயச்செய்தல் .
|
|
ஆலவாட்டுதல்
|
சிறிது காயச்செய்தல் .
|
|
ஆல்வு
|
அகன்றது .
|
|
ஆலக்கச்சி
|
அரிதாரம் .
|
|
ஆலக்கட்டி
|
துரிசு .
|
|
ஆலக்கரண்டி
|
அகன்ற கரண்டி .
|
|
ஆலக்கொடிச்சி
|
காண்க : ஆலக்கச்சி .
|
|
ஆலகண்டன்
|
கழுத்தில் நஞ்சுகொண்ட சிவன் .
|
|
ஆலகம்
|
காண்க : ஆமலகம் .
|
|
ஆலகாலம்
|
பாற்கடலில் தோன்றிய நஞ்சு ; நிலவாகை .
|
|
ஆலகாலி
|
காளி .
|
|
ஆலகிரீடை
|
காண்க : அலரி .
|
|
ஆலங்கட்டி
|
கல்மழை .
|
|
ஆலாங்கட்டி
|
கல்மழை .
|
|
ஆலங்காட்டாண்டி
|
வரிக்கூத்துவகை .
|
|
ஆலச்சுவர்
|
சார்புசுவர் ; ஆள்மட்டச் சுவர் .
|
|
ஆலசம்
|
சோம்பு .
|
|
ஆலசியம்
|
சோம்பு ; தாமதம் ; கவனக்குறைவு .
|
|
ஆலத்தி
|
காண்க : ஆரத்தி .
|
|
ஆலத்தியெடுத்தல்
|
ஆலத்தி சுற்றுதல் .
|
|
ஆலத்திவழித்தல்
|
ஆலத்தி சுற்றுதல் .
|
|
ஆலதரன்
|
நஞ்சைக் கழுத்தில் தாங்கியிருபப்வனான சிவன் .
|
|
ஆலந்தை
|
ஒரு சிறுமரம் .
|
|
ஆலம்
|
நீர் ; கடல் ; மழை ; மரவகை ; ஆகாயம் ; அகலம் ; மலர் ; கலப்பை ; நஞ்சு ; கருமை ; உலகம் ; புன்கு ; மாவிலங்கம் ; ஈயம் ; துரிசு
|
|
ஆலம்பம்
|
பற்றுக்கோடு ; தொடுகை ; கொல்லுகை .
|
|
ஆலம்பனம்
|
பற்றுக்கோடு ; தொடுகை ; கொல்லுகை .
|
|
ஆலம்பலிகிதம்
|
எழுத்துக்கூட்டிலக்கணம் .
|
|
ஆலம்பி
|
அரிதாரம் .
|
|
ஆலமர்கடவுள்
|
கல்லால மரத்தின்கீழ் தென்முகக் கடவுளாய் வீற்றிரூக்கும் சிவன் .
|
|
ஆலமர்செல்வன்
|
கல்லால மரத்தின்கீழ் தென்முகக் கடவுளாய் வீற்றிரூக்கும் சிவன் .
|
|
ஆலமரம்
|
மரவகை .
|
|
ஆலமுடையோன்
|
துரிசு .
|
|
ஆலமுண்டோன்
|
பாற்கடலில் தோன்றிய நஞ்சையுண்டவனாகிய சிவன் .
|
|
ஆலயம்
|
தேவாலயம் ; தங்குமிடம் ; நகரம் ; யானைக்கூடம் .
|
|
ஆலயவிஞ்ஞானம்
|
சாகும்வரை நிற்கும் உணர்ச்சி .
|
|
ஆவல்
|
ஒலி ; மயிற்குரல் .
|
|
ஆலலம்
|
திருமணத்தின்போது மணமகன் மணமகட்குக்கொடுக்கும் கூறைப் புடைவை .
|
|
ஆலவட்டம்
|
பெருவிசிறி ; விசிறி .
|
|
ஆலவன்
|
ஆலிலையில் பள்ளிகொள்ளும் திருமால் ; கடலில் தோன்றிய சந்திரன் .
|
|
ஆருகதம்
|
சமணமதம் ; நாவல்மரம் .
|
|
ஆருகதன்
|
சமணன் .
|
|
ஆருத்திரை
|
திருவாதிரை .
|
|
ஆருப்பியம்
|
வங்கமணல் .
|
|
ஆருபதம்
|
பித்தளை .
|
|
ஆருயிர் மருந்து
|
உணவு .
|
|
ஆருவம்
|
நீர் .
|
|
ஆருழலைப்படுதல்
|
வெப்பத்தால் தகிக்கப்படுதல் ; நீர்வேட்கையால் வருந்துதல் .
|
|
ஆரூடம்
|
ஏறியது ; கேட்பானது இராசிநிலை கொண்டு நினைத்த காரியம் கூறும் சோதிடம் .
|
|
ஆரூடன்
|
ஊர்தி முதலியவற்றில் ஏறினவன் ; சீவன்முத்தன் .
|
|
ஆரூபம்
|
ஒவ்வாமை ; நீங்காமை .
|
|
ஆரூர்
|
திருவாரூர் .
|
|
ஆரூர்க்கால்
|
கருப்பூரவகை .
|
|
ஆரூரன்
|
சுந்தரமூர்த்தி நாயனார் .
|
|
ஆரேவதம்
|
காண்க : சரக்கொன்றை .
|
|
ஆரை
|
நீராரை ; காண்க : ஆத்தி ; கோட்டை மதில் ; புற்பாய் ; அச்சுமரம் ; தோல் வெட்டும் உளி ; ஆரக்கால் .
|
|
ஆரைக்காலி
|
கோரைவகை .
|
|
ஆரைக்கீரை
|
நீராரைக் கீரை .
|
|
ஆரைபற்றி
|
உடும்பு .
|
|
ஆரொட்டி
|
கூவைக்கிழங்கு .
|
|
ஆரோக்கியசாலை
|
மருத்துவவிடுதி ; மருத்துவமனை .
|
|
ஆரோக்கியம்
|
நோயின்மை ; நலம் .
|
|
ஆரோகணம்
|
ஏறுகை ; கமகம் பத்தனுள் ஒன்று ; கற்படி ; தாழ்வாரம் ; வெளிப்போகை ; முன்வாயில் ; ஏணி .
|
|
ஆரோகணித்தல்
|
எழும்புதல் ; ஏறுதல் .
|
|
ஆரோகம்
|
வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று ; ஏறுகை ; உயர்ச்சி ; நீட்சி ; நிதம்பம் ; முளை .
|
|
ஆரோகி
|
இசையின் வர்ணபேதங்களுள் ஒன்று .
|
|
ஆரோசை
|
ஏற்றிப் பாடும் இசை .
|
|
ஆரோணம்
|
மீக்கோள் .
|
|
ஆரோதமடித்தல்
|
அருளால் கொடுஞ்செயலினின்றும் மனநெகிழ்தல்
|
|
ஆரோபணம்
|
ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் .
|
|
ஆரோபம்
|
ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் .
|