| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
முந்தூழ்
|
பழவினை ; மூங்கில் .
|
|
முந்தை
|
பழைமை ; முற்காலம் ; முன்னோன் ; முன் ; சிறு பாண்டவகை .
|
|
முந்தைநாள்
|
முற்காலம் ; காண்க : முந்தாநாள் .
|
|
முந்தையோர்
|
முன்னோர் .
|
|
முந்நாடு
|
சேர சோழ பாண்டிய நாடுகள் .
|
|
முந்நீர்
|
பூமியைப் படைத்தல் , காத்தல் , அழித்தல் என்னும் மூன்று தன்மையையுடையதும் ஆற்றுநீர் , ஊற்றுநீர் , மழைநீர் என்னும் மூன்று நீர்களை உடையதுமான கடல் .
|
|
முந்நூல்
|
பூணூல் ; மகளிர் கழுத்தணிவகை .
|
|
முப்பகை
|
காமம் , வெகுளி , மயக்கம் என்னும் முக்குற்றங்கள் ; பிசாசு , உலகு , உடல் ஆகிய மனிதனின் மூன்று எதிரிகள் .
|
|
முப்பத்திரண்டறம்
|
ஆதுலர்க்குச் சாலை , ஓதுவார்க்கு உணவு , அறுசமயத்தார்க்கு உண்டி , பசுவுக்குத் தீனி , சிறைச்சோறு , ஐயம் , தின்பண்டம் ஈதல் , அறவைச்சோறு , பிள்ளை பெறுவித்தல் , பிள்ளை வளர்த்தல் , பிள்ளைக்குப் பால் வார்த்தல் , அறவைப் பிணஞ்சுடல் , அழிந்தோரை நிறுத்துதல் , சுண்ணம் , நோய்க்கு மருந்து , வண்ணார் , நாவிதர் , கண்ணாடி , காதோலை , கண்மருந்து , தலைக்கு எண்ணெய் ,பெண்போகம் , பிறர் துயர் காத்தல் , தண்ணீர்ப்பந்தல் , தடம் , மடம் , சோலை , ஆவுரிஞ்சுதறி , விலங்கிற்குணவு , ஏறுவிடுத்தல் , விலைகொடுத்து உயிர்காத்தல் , கன்னிகாதானம் என்னும் முப்பத்திரண்டு வகையான அறம் .
|
|
முப்பத்துமூன்றுதேவர்
|
ஆதித்தர் பன்னிருவர் , அசுவினிகள் இருவர் , உருத்திரர் பதினொருவர் , வசுக்கள் எண்மர் ஆகியோரின் திரள் .
|
|
முப்பதம்
|
'தத்துவமசி ' என்னும் மூன்று சொற்களாலான தொடர் .
|
|
முப்பலை
|
கடுக்காய். நெல்லிக்காய் , தான்றிக்காய் என்பன .
|
|
முப்பழம்
|
முக்கனிகளாகிய மாம்பழம் , பலாப்பழம் , வாழைப்பழம் .
|
|
முப்பா
|
ஆசிரியப்பா , கலிப்பா , வஞ்சிப்பா என்பன .
|
|
முப்பாட்டன்
|
பாட்டனுக்குத் தந்தை ; பாட்டனுக்குப் பாட்டன் .
|
|
முப்பாட்டி
|
முப்பாட்டனின் மனைவி ; பாட்டனுக்குப் பாட்டி ; பாட்டியின் தாய் .
|
|
முப்பால்
|
அறம் , பொருள் , இன்பம் என்னும் மூன்று பகுதிகள் ; முப்பாலை விரித்துக் கூறும் திருக்குறள் ; ஆண்பால் , பெண்பால் , அலிப்பால் என்பன ; காய்ச்சுப்பால் , திரட்டுப்பால் , குழம்புப்பால் என்னும் மூவகைப்பால் ; தாய்ப்பால் , ஆவின்பால் , ஆட்டுப்பால் என்னும் மூவகைப்பால் .
|
|
முப்பாலகர்
|
பால் குடிப்பவர் , பாலும் அன்னமும் உண்பவர் , அன்னம் மாத்திரம் உண்பவர் என மூவகைப்பட்ட குழந்தைகள் .
|
|
முப்பாழ்
|
நிலத்திற்குண்டாகும் வெயிற்பாழ் , வெள்ளப்பாழ் , குடிப்பாழ் என்னும் மூவகைக் கேடுகள் ; உடம்புக்குள் சூனியமான மூன்றிடம் .
|
|
முப்பாற்புள்ளி
|
ஆய்தவெழுத்து ; குற்றியலிகரம் , குற்றியலுகரம் , ஆய்தம் என்னும் புள்ளியுள்ள மூன்றெழுத்துகள் .
|
|
முப்பான்
|
மூன்று பத்து .
|
|
முப்பிறைச்சுமை
|
கக்குவான் , கக்கலிருமல் .
|
|
முப்பு
|
அகத்தியர் வாகடநூல் ; காண்க : முப்பூ .
|
|
முப்புடி
|
இராசதம் , சாத்துவிகம் , தாமதம் ஆகிய மூன்று குணங்கள் ; காண்க : திரிபுடி .
|
|
முப்புடைக்கனி
|
மூன்று பிரிவுகளையுடைய தேங்காய் .
|
|
முப்புடைக்காய்
|
மூன்று பிரிவுகளையுடைய தேங்காய் .
|
|
முப்புரம்
|
திரிபுரங்களான பொன் , வெள்ளி , இரும்பு இவற்றாலான கோட்டைகள் .
|
|
முப்புரமெரித்தோன்
|
சிவபெருமான் ; காண்க : சிவனார்வேம்பு ; ஆடுதின்னாப்பாளை .
|
|
முப்புரி
|
மூன்று நூல் சேர்த்துத் திரித்த கயிறு ; காண்க : முப்புரம் .
|
|
முப்புரிநூல்
|
பூணூல் .
|
|
முப்புரிநூலோர்
|
பார்ப்பனர் .
|
|
முப்புவனம்
|
துறக்கம் , பூமி , பாதலம் ஆகிய மூன்று உலகங்கள் .
|
|
முப்புள்ளி
|
ஆய்தவெழுத்து .
|
|
முப்பூ
|
இரும்பு முதலியவற்றைப் பொன்னாக்கவும் நூறாயிரம் ஆண்டு உயிர்வாழச் செய்யவும் வல்ல மருந்து .
|
|
முப்பொருள்
|
இறை , உயிர் , தளை (பதி , பசு , பாசம் ) என்னும் மூன்று முதற்பொருள்கள் ; பிரமன் , திருமால் , உருத்திரன் என்னும் மும்மூர்த்திகள் .
|
|
முப்பொழுது
|
காண்க : முப்போது .
|
|
முப்பொழுதுந்திருமேனிதீண்டுவார்
|
ஆதிசைவ குருக்கள் .
|
|
முப்பொறி
|
எண்ணம் , சொல் ,உடல் , (மனம் , வாக்கு , காயம்) என்னும் மூன்று கரணங்கள் .
|
|
முப்போது
|
காலை , உச்சி , மாலை என்னும் மூன்று வேளைகள் .
|
|
மும்மடங்கு
|
மூன்று மடங்கு .
|
|
மும்மடி
|
மூன்று மடங்கு ; அழகின் அறிகுறியாக மகளிர் வயிற்றிற் காணப்படும் மூன்று மடிப்பு .
|
|
மும்மண்டலம்
|
பூமி , அந்தரம் , துறக்கம் என்னும் மூன்று பகுதிகள் ; சூரிய சந்திர அக்கினி ஆகிய மூன்று மண்டலங்கள் .
|