| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
மாராயன்
|
அரசன் ; அரசனாற் பெறும் பட்டப்பெயர் ; திருவிதாங்கூரில் உவச்சரையொத்த ஒரு சாதி .
|
|
மாராழம்
|
மார்பளவுள்ள ஆழம் .
|
|
மாரி
|
மழை ; நீர் ; மேகம் ; மழைக்காலம் ; பூராட நாள் ; புள்வகை ; சாவு ; அம்மைநோய் ; ஒரு தேவதை ; துர்க்கை .
|
|
மாரிக்காலம்
|
மழைக்காலம் .
|
|
மாரிநாள்
|
உத்தரநாள் .
|
|
மாரிபம்
|
மூலம் .
|
|
மாரிமழை
|
வேனிற்காலத்திற் பெய்யும் மழை .
|
|
மாரிமறுத்தல்
|
மழை நின்றுவிடுகை ; மழையில்லாமை .
|
|
மாரிமுத்து
|
அம்மைநோய் .
|
|
மாரியம்மன்
|
அம்மைக்குரிய தேவதை .
|
|
மாரீசம்
|
வஞ்சகம் ; மூர்ச்சை ; உபபுராணத்துள் ஒன்று ; மிளகுதைலம் .
|
|
மாருதப்படை
|
வாயுதேவனின் அம்பு .
|
|
மாருதம்
|
காற்று .
|
|
மாருதன்
|
வாயுபகவான் .
|
|
மாருதி
|
அனுமான் ; வீமன் .
|
|
மாருதிநாதம்
|
வங்கமணல் .
|
|
மாருதேயன்
|
அனுமான் .
|
|
மாரெரிச்சல்
|
செரியாமையால் உண்டாகும் மார்பெரிச்சல் நோய் .
|
|
மாரோடம்
|
செங்கருங்காலி .
|
|
மால்
|
பெருமை ; பெருமையுடையவன் ; திருமால் ; அருகன் ; இந்திரன் ; காற்று ; புதன் ; சோழன் ; மலை ; வளமை ; செல்வம் ; பழைமை ; மேகம் ; கண்ணேணி ; மயக்கம் ; ஆசை ; காமம் ; கருமை ; விட்டுணுக்கரந்தை ; எழுதக்கருவி ; செங்கற்கட்டளை ; காளவாய் ; மாதிரி ; எல்லை ; வலைவகை ; இலாயம் ; அரசிறைவகை ; சொத்து ; அரண்மனை .
|
|
மால்தங்கை
|
உமை ; பாடாணவகை .
|
|
மால்தொடை
|
துளசி .
|
|
மால்பு
|
கண்ணேணி .
|
|
மால்முடிதல்
|
வலைபின்னுதல் .
|
|
மால்முருகு
|
துளசி .
|
|
மால்மைத்துனன்
|
சிவபிரான் ; துருசு .
|
|
மால்வீடு
|
காண்க : சாளக்கிராமம் .
|
|
மாலகம்
|
வேப்பமரம் ; செம்பரத்தைவகை .
|
|
மாலதி
|
சிறுசண்பகம் ; மல்லிகை ; காட்டுமல்லிகை ; விளக்குத்தண்டு ; நிலவின்கதிர் ; நிருவாணம் .
|
|
மாலதிபலம்
|
சாதிக்காய் .
|
|
மாலம்
|
குங்குமமரம் ; பேய் .
|
|
மாலமாயம்
|
பேயின் தந்திரம் .
|
|
மாலயம்
|
சந்தனமரம் ; காண்க : மாளயம் .
|
|
மாலர்
|
கவசம் ; வேடர் ; புலையர் .
|
|
மாலவன்
|
புதன் ; திருமால் .
|
|
மாலி
|
மாலையணிந்தவன் ; சூரியன் ; ஓர் அரக்கன் ; கள் ; தோட்டக்காரன் .
|
|
மாலிகன்
|
பூ விற்போன் .
|
|
மாலிகை
|
மாலை ; வரிசை ; சீமைச்சணல் .
|
|
மாலிமி
|
இளமைப் பருவத்திற் செய்யும் நட்பு ; காண்க : மாலுமி .
|
|
மாலியம்
|
கடவுளுக்குப் படைக்கும் மலர் ; பூ .
|
|
மாலிருஞ்சோலை
|
மதுரை மாவட்டத்திலுள்ள அழகர்மலை .
|
|
மாலினி
|
பார்வதி ; துர்க்கை .
|
|
மாலுக்கிளையாள்
|
துர்க்கை .
|
|
மாலுகம்
|
காண்க : மாலகம் .
|
|
மாலுதல்
|
மயங்குதல் ; மாட்சிமைப்படுதல் ; எழுதகம் அமைத்தல் .
|
|
மாலுதானம்
|
காண்க : பச்சைப்பாம்பு .
|
|
மாலுதானன்
|
காண்க : பச்சைப்பாம்பு .
|
|
மாலுந்திவந்தோன்
|
திருமாலின் கொப்பூழில் உதித்தவனான பிரமன் .
|
|
மாலுமி
|
கப்பலோட்டி .
|
|
மாலூர்தி
|
திருமாலின் ஊர்தியான கருடன் .
|
|
மாலூரம்
|
வில்வமரம் ; மாவிலிங்கமரவகை .
|
|
மாலை
|
அந்திப்பொழுது ; இரவு ; இருள் ; சமயம் ; குற்றம் ; மரகதக்குற்றவகை ; இயல்பு ; குணம் ; தொடுக்கப்பட்டது ; தொடுத்த பூந்தொடை ; மாதரணிவடம் ; நூல்வகை ; வரிசை ; பாசம் ; விறலி ; பெண் .
|
|
மாலைக்கண்
|
இரவில் கண் தெரியாமை ; பார்வைக்குறைவு .
|
|
மாலைக்கண்ணண்
|
இராக்குருடன் ; பார்வைக் குறைவுள்ளவன் .
|
|
மாலைக்காரன்
|
மாலை தொடுப்போன் .
|
|
மாலைக்குளியல்
|
அந்திநேரத்துக் குளிக்கை .
|
|
மாலைக்குளியன்
|
மாலையிற் குளித்து அலங்கரித்துக்கொள்ளும் பகட்டன் .
|
|
மாலைகட்டி
|
கோயிலுக்குப் பூமாலை கட்டுவோன் .
|
|
மாலைசாத்துதல்
|
மாலையால் அலங்கரித்தல் .
|
|
மாலைசூட்டு
|
காண்க : சுயம்வரம் .
|
|
மாலைசூட்டுதல்
|
மாலை சூட்டி மணத்தல் .
|
|
மாலைநிலை
|
இறந்த கணவனுடைய சிதையில் தீப்பாயும் பொருட்டு அவன் மனைவி மாலைக் காலத்து நின்ற நிலை கூறும் புறத்துறை .
|
|
மாலைநேரம்
|
அந்திவேளை .
|
|
மாலைப்படிகம்
|
பளிங்கு .
|
|
மாலைமசங்கல்
|
அந்திக்காலத்து மங்கற்பொழுது .
|