| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
மாயோனாள்
|
திருவோணநாள் .
|
|
மார்
|
நெஞ்சு ; முலை ; மார்பு ; நெஞ்சு ; நான்குமுழ அளவுள்ள நீட்டலளவை ; ஓர் அசை ; பல்லோர் படர்க்கை விகுதியுள் ஒன்று ; ஒரு வியங்கோள் விகுதி ; பன்மைவிகுதி .
|
|
மார்க்கட்டி
|
மார்பில்வரும் புண் .
|
|
மார்க்கட்டு
|
மார்பின் உறுதியமைப்பு ; இரவிக்கை ; மார்பின் குறுக்கேயிடும் வேட்டிக்கட்டு ; சந்தை .
|
|
மார்க்கடம்
|
காண்க : மர்க்கடம் ; குரங்குக்கூட்டம் .
|
|
மார்க்கண்டம்
|
மார்பெலும்பு .
|
|
மார்க்கணம்
|
அம்பு ; இரப்பு ; தேடுகை ; நெஞ்சுப்பகுதி .
|
|
மார்க்கம்
|
நெறி , வழி ; நெடுந்தெரு ; ஒழுங்கு ; முறை ; ஒழுக்கம் ; சமயம் ; மூலம் ; மரபுவழி ; மறுதலை ; ஆராய்ச்சி ; மார்கழிமாதம் ; கத்தூரி ; அகப்பொருட்டுறை ; கூத்துவகை ; தாளப்பிரமாணத்துள் ஒன்று ; குதிரைநடை ; காண்க : மார்க்கவம் ; உலகம் .
|
|
மார்க்கவசம்
|
மார்பிலணியும் காப்புச்சட்டை .
|
|
மார்க்கவம்
|
கையாந்தகரைப்பூண்டு .
|
|
மார்க்கிகன்
|
வழிச்செல்வோன் ; வேடன் .
|
|
மார்க்சியம்
|
காரல்மார்கஸ் என்பவரின் கொள்கை .
|
|
மார்கழி
|
சௌரமான மாதம் பன்னிரண்டனுள் ஒன்பதாம் மாதம் .
|
|
மார்கழிநீராடுதல்
|
மார்கழி மாதத்தில் இளம்பெண்கள் நாடோறும் அதிகாலையில் குளத்திற்குச் சென்று நீராடுகை .
|
|
மார்ச்சரியம்
|
பொறாமை .
|
|
மார்ச்சளி
|
காண்க : மார்புச்சளி .
|
|
மார்ச்சனம்
|
துடைத்தல் ; தூய்மைசெய்தல் ; கடவுள் திருமுன் இடக்கையினின்று ஒழுகவிடும் நீரை மந்திரபூர்வமாய்த் தலையில் தெளிக்கை .
|
|
மார்ச்சனி
|
துடைப்பம் ; சீமையால் .
|
|
மார்ச்சனை
|
இனிது ஒலிக்க மேளத்திடும் கரிய மட்சாந்து ; முழவின் வார் .
|
|
மார்ச்சாலம்
|
பூனை ; காண்க : மரநாய் .
|
|
மார்ச்சிலந்தி
|
முலைப்பக்கத்துண்டாகும் புண் .
|
|
மார்த்தவம்
|
மென்மைத்தன்மை .
|
|
மார்த்தாண்டன்
|
சூரியன் .
|
|
மார்தட்டுதல்
|
போட்டிபோடுதல் ; குறித்த ஒரு துறையில் தான் மேன்மையானவன் என்பதைக் குறிப்பிக்குமாறு மார்பைத் தட்டுதல் ; தற்பெருமையடைதல் .
|
|
மார்பகம்
|
நெஞ்சு ; முலை .
|
|
மார்பம்
|
நெஞ்சு ; முலை .
|
|
மார்பாக
|
மூலமாய் .
|
|
மார்பாணி
|
ஒரு மார்பின் புண்வகை ; தலைமையாணி ; தண்டனையாக மார்பில் தைக்கும் ஆணி .
|
|
மார்பு
|
நெஞ்சு ; முலை ; வடிம்பு ; தடாகம் ; அகலம் ; கருப்பூரவகை ; நான்குமுழ அளவுள்ள நீட்டலளவை .
|
|
மார்புக்குழி
|
மார்பெலும்பின் கீழுள்ள குழி ; இதயம் , நுரையீரல் முதலிய உறுப்புகளடங்கிய நெஞ்சின் அறை .
|
|
மார்புச்சளி
|
நெஞ்சில் சளிபிடிக்கும் நோய்வகை .
|
|
மார்புநோவு
|
மார்பில் உண்டாகும் வலிவகை ; மார்த்தசையில் உண்டாகும் நோவுவகை .
|
|
மார்பெலும்பு
|
மார்பிலுள்ள எலும்பு .
|
|
மார்வம்
|
நெஞ்சு .
|
|
மார்வலி
|
காண்க : மார்புநோவு .
|
|
மாரகம்
|
சாவு ; இறப்பைத்தருவது ; கொடுமையான தொற்றுநோய் .
|
|
மாரகன்
|
சாவுக்குக் காரணமான கோள் ; சாவை உண்டாக்குவோன் .
|
|
மாரகாகளம்
|
மன்மத வாத்தியமான குயில் .
|
|
மாரசயன்
|
மாரனை வென்றவனான அருகன் .
|
|
மாரடித்தல்
|
இன்னற்படுதல் ; இழவில் அழும்போது மார்பில் மகளிர் அடித்துக்கொள்ளுகை .
|
|
மாரடைப்பு
|
நெஞ்சடைப்பு , மூர்ச்சை ; சூதகநோய் ; மார்பில் உண்டாகும் வலிவகை .
|
|
மாரணம்
|
சாவு ; அழித்தல் ; எண்வகை மாயவித்தையுள் ஒருவனை மந்திரத்தால் இறக்கச் செய்யும் வித்தை .
|
|
மாரதந்தி
|
காமன் யானையான இருள் .
|
|
மாரதன்
|
தான் ஒருவனே பத்தாயிரம் வீரரை எதிர்த்துப் போர் செய்யவல்ல தேர்வீரன் .
|
|
மாரப்பற்று
|
கருப்பூரவகை .
|
|
மாரபேரி
|
காமன் முரசான கடல் .
|
|
மாரம்
|
செடிவகை .
|
|
மாரவேள்
|
காமன் .
|
|
மாரன்
|
மன்மதன் ; புத்தரை மயக்க முயன்று தோற்ற ஒரு தேவன் .
|
|
மாரனாலயம்
|
மன்மதன் இருக்கை ; பெண்குறி .
|
|
மாராட்டம்
|
துன்பம் ; ஆள்மாறாட்டம் ; மகாராட்டிரதேசம் ; ஊர் .
|
|
மாராப்பு
|
பெண்கள் தம் மார்பின் குறுக்கேயிடும் சீலைப்பகுதி ; முதுகுடன் இணைத்து மூட்டை கட்டுங் கச்சை .
|
|
மாராயஞ்சொல்லுதல்
|
நற்செய்தி கூறுதல் .
|
|
மாராயம்
|
வேந்தனால் பெறும் சிறப்பு ; மகிழ்ச்சி ; நற்செய்தி ; பாராட்டுச்சொல் ; பெண் பூப்படைந்தமையைச் சுற்றத்தாருக்கு அறிவிக்கை .
|
|
மாராயவஞ்சி
|
அரசனாற் சிறப்பெய்திய வெற்றி வீரனின் பெற்றிமை கூறும் புறத்துறை .
|