| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
புலர்பு
|
காண்க : புலர்காலை .
|
|
புலர்வு
|
காண்க : புலர்காலை .
|
|
புலரி
|
காண்க : புலர்காலை ; சூரியன் .
|
|
புலரிவைகறை
|
வைகறைக்கும் புலரிக்கும் இடைப்பட்ட காலம் .
|
|
புலவர்
|
புலமையோர் ; பாவாணர் ; ஞானிகள் ; தேவர் ; குறுநிலமன்னர் ; கூத்தர் ; கம்மியர் ; ஓவியம் முதலிய கலைவல்லார் ; சாளுக்கியர் ; ஒருவகைச் சாதியார் ; சில இனத்தவரின் பட்டப்பெயர் .
|
|
புலவராற்றுவழக்கம்
|
புலநெறி வழக்கம் .
|
|
புலவரை
|
நிலவெல்லை ; அறிவின் எல்லை .
|
|
புலவல்
|
வெறுப்பு ; புலால் நாற்றம் .
|
|
புலவன்
|
அறிஞன் ; பாவாணன் ; தேவன் ; புதன் ; முருகன் ; இந்திரன் ; அருகன் ; புத்தன் .
|
|
புலவி
|
ஊடல் ; வெறுப்பு .
|
|
புலவிநீட்டம்
|
ஊடல்மிகுதி ; கலவியிற் கூச்சம் .
|
|
புலவிநுணுக்கம்
|
சிறு காரணங்களைக் கற்பனையாகக்கொண்டு தலைவி ஊடுகை .
|
|
புலவு
|
காண்க : புல ; இரத்தம் ; வெறுப்பு ; அலறு ; நரகம் ; வயல் .
|
|
புலவுதல்
|
புலால் நாற்றமடித்தல் ; வெறுத்தல் .
|
|
புலவோன்
|
அறிஞன் ; பாவாணன் ; ஆன்மா .
|
|
புலன்
|
ஐம்புலன் நுகர்ச்சியாகிய சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் என்பவை ; பொறி ;கருமேந்திரியம் ; அறிவுடைமை ; அறிவுக்கூர்மை ; வெளிப்படக் காண்டல் ; உறுப்பு ; வயல் ; நூல்வனப்புள் ஒன்று .
|
|
புலன்வனப்பு
|
இயற்சொல்லால் உரிய பொருள் விளங்கக் கூறுதல் .
|
|
புலன்வென்றோர்
|
ஐம்புலன்களை வென்ற முனிவர் .
|
|
புலனறிதல்
|
துப்பறிதல் .
|
|
புலனி
|
நண்டு .
|
|
புலனிடம்
|
வாய் .
|
|
புலனுழுதுண்மார்
|
கற்றோர் .
|
|
புலனெறிதல்
|
ஐம்புலன்களை வெல்லுதல் .
|
|
புலனொடுக்கம்
|
ஐம்புல ஆசையை ஒடுக்குகை .
|
|
புலாகம்
|
சோற்றுப்பருக்கை .
|
|
புலாதி
|
கவலை ; குழப்பம் .
|
|
புலால்
|
ஊன் முதலியன ; புலால்நாற்றம் ; தசை நரம்பு .
|
|
புலால்கட்டி
|
முத்துக்குளியலின்போது மீன் முதலியவற்றை வாய்கட்டித் தடுப்போன் .
|
|
புலாவுதல்
|
புலால் நாற்றம் அடித்தல் ; வெறுத்தல் ; ஒலித்தல் ; விடிதல் .
|
|
புலாழி
|
புலால் நாற்றம் பொருந்திய சக்கரப் படை .
|
|
புலாற்றானம்
|
உடம்பு .
|
|
புலாற்றுருத்தி
|
உடம்பு .
|
|
புலான்மறுத்தல்
|
ஊன் உணவை விலக்குதல் .
|
|
புலானீர்
|
இரத்தம்
|
|
புலி
|
ஒரு விலங்குவகை ; ஒரு முனிவன் ; வேங்கை மரம் ; சிங்கம் ; சிம்மராசி' நால்வகைச் சாந்தினுள் ஒன்று ; மயிர்ச்சாந்து ; உண்ணாக்கு ; சூது கருவியுள் ஒன்று .
|
|
புலிக்கண்கல்
|
கோமேதகம் .
|
|
புலிக்குடத்தி
|
கழுதைப்புலி .
|
|
புலிக்கொடியோன்
|
சோழன் .
|
|
புலிகடிமால்
|
புலியைக் கொன்று முனிவரை மீட்ட இருங்கோவேள் என்னும் சிற்றரசன் .
|
|
புலிங்கம்
|
ஊர்க்குருவி ; தீப்பொறி .
|
|
புலிசங்கிலி
|
சங்கிலிவகை .
|
|
புலித்தண்டை
|
விருதுவகை ; கோயில் மரியாதை வகை .
|
|
புலித்தொடர்
|
புலிச்சங்கிலிவகை .
|
|
புலித்தோலுடையோன்
|
சிவபிரான் .
|
|
புலிதடுக்கி
|
காண்க : புலிதொடக்கி ; தொடரிச்செடி .
|
|
புலிதொடக்கி
|
கற்றாழை ; கொடிவகை .
|
|
புலிந்தன்
|
காண்க : புளிஞன் .
|
|
புலிநகக்கொன்றை
|
புலிநகம் போன்ற பூவையுடைய கொன்றைமரம் .
|
|
புலிப்பற்றாலி
|
புலிப்பல்லால் ஆன கழுத்தணி .
|
|
புலிப்பொறி
|
மதிற்பொறிவகை .
|
|
புலிப்போத்து
|
புலிக்குட்டி .
|
|
புலிமுகப்பு
|
புலியுருவத்தை முகப்பிற் செய்துவைத்துள்ள மாளிகை .
|
|
புலிமுகமாடம்
|
புலியுருவத்தை முகப்பிற் செய்துவைத்துள்ள மாளிகை .
|
|
புலிமுகவாயில்
|
புலிமுக உருவம் அமைந்த வாயில் .
|
|
புலியுயர்த்தோன்
|
புலிக்கொடியை உயர எடுத்தவனாகிய சோழன் .
|
|
புலியுறுமி
|
புலிபோல் முழங்கும் ஒரு பறைவகை ; கிறிச்சான் ; புள்ளோட்டும் கருவி .
|
|
புலியுறை
|
புலித்தோலாற் செய்த ஆயுதத்தின் மேலுறை .
|
|
புலியூர்
|
புலிக்கால் முனிவர் வழிபட்ட நகரமாகிய சிதம்பரம் .
|
|
புலு
|
பத்தைக் குறிக்கும் குழூஉக்குறி .
|
|
புலுட்டுதல்
|
ரொட்டி முதலியன கருக்குதல் ; சுடுதல் .
|
|
புலுட்டை
|
செழிப்பற்றது ; மங்கின நிறம் ; செழிப்பற்ற தன்மை .
|
|
புலுண்டல்
|
கருகல் உணவு ; செழிப்பற்ற தன்மை .
|
|
புலுண்டுதல்
|
கருகுதல் .
|
|
புலுதம்
|
உயிரளபெடை ; மெய்யெழுத்து ; குதிரை முழுவோட்டம் ; இசையின் காலவகை .
|
|
புலை
|
இழிவு ; அழுக்கு ; தீட்டு ; தீயநெறி ; பொய் ; ஊன் ; கீழ்மகன் ; தீநாற்றம் .
|