| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
அறவுபதை
|
அமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் சூழ்ச்சி நான்கனுள் ஒன்று ; தருமநெறியைக் கூறி ஆராய்தல் .
|
|
அறவுரை
|
நீதிநெறி உரைத்தல் ; நீதிமொழி .
|
|
அறவுளி
|
உடல் நலம்பெறச் செய்யும் மந்திரம் .
|
|
அறவூதுதல்
|
புடமிடுதல் .
|
|
அறவை
|
உதவியற்ற நிலை ; தீமை ; அறநெறி .
|
|
அறவைச்சிறை
|
கடுஞ்சிறை .
|
|
அறவைச்சோறு
|
உறவற்றவர்க்கு அளிக்கும் உணவு .
|
|
அறவைத்தல்
|
காண்க : அறவூதுதல் .
|
|
அறவைத்தூரியம்
|
உறவற்றவர்க்கு அளிக்கும் உடை .
|
|
அறவைப்பிணஞ்சுடுதல்
|
உறவற்ற பிணத்துக்கு ஈமக்கடன் செய்தல் .
|
|
அறவைப்பு
|
புடம்வைக்கை .
|
|
அறவோர்பள்ளி
|
சமண பௌத்த ஆலயம் .
|
|
அறவோலை
|
இனாம் சாசணம் .
|
|
அறவோன்
|
அறநெறியாளன் ; புத்தன் .
|
|
அறளை
|
நச்சுத் தொந்தரை ; ஒரு நோய் .
|
|
அறன்
|
வேள்வி முதல்வன் ; அறக்கடவுள் .
|
|
அறனில்பால்
|
தீவினை .
|
|
அறனிலாளன்
|
அறவுணர்வு அற்றவன் .
|
|
அறனையம்
|
காட்டுக்கருணை .
|
|
அறனோம்படை
|
தருமம் பாதுகாக்கை ; தருமம் பாதுகாக்கும் இடம் ; தருமம் போதிக்குமிடம் .
|
|
அறத்தவிசு
|
நீதிபதியின் இருக்கை .
|
|
அறத்தளி
|
அந்தப்புரம் .
|
|
அறத்தின்செல்வி
|
காண்க : அறச்செல்வி .
|
|
அறத்தின்சேய்
|
தருமன் .
|
|
அறத்தின்மூர்த்தி
|
தருமதேவதை ; பார்வதி ; திருமால் .
|
|
அறத்துணைவி
|
தருமபத்தினி .
|
|
அறத்துப்பால்
|
திருக்குறள் , நாலடியார் நூல்களின் முப்பால்களுள் முதலானதும் அறத்தைப் பற்றிக் கூறுவதுமான பகுதி .
|
|
அறத்துறுப்பு
|
அறத்தினது கூறு ; அவை : ஐயப்படாமை , விருப்பின்மை , வெறுப்பின்மை , மயக்கமின்மை , பழியை நீக்கல் , அழிந்தோரை நிறுத்தல் , அறம் விளக்கல் , பேரன்புடைமை .
|
|
அறத்துறை
|
அறவழி .
|
|
அறத்தைக்காப்போன்
|
ஐயனார் .
|
|
அறத்தொடுநிலை
|
களவினைத் தலைவி முதலானோர் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை .
|
|
அறத்தொடுநிற்றல்
|
களவினைத் தலைவி முதலானோர் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை .
|
|
அறதேயன்
|
அறங்களை நடத்துவோன் .
|
|
அறநிலை
|
பிரமமணம் ; அறங்களைப் பாதுகாத்தற்குரிய நிலையம் .
|
|
அறநிலைப்பொருள்
|
நெறிப்படி அரசன் பெறும் இறைப்பொருள் .
|
|
அறநிலையறம்
|
நால்வகைக் குலத்தாரும் தத்தம் நெறியில் பிழையாது அரசன் பாதுகாக்கை .
|
|
அறநிலையின்பம்
|
ஒத்த கன்னியை மணந்து இல்லறத்தினின்று நுகரும் இன்பம் .
|
|
அறநீர்
|
அருநீர் ; நீரின் அளவு குறைந்த நிலை ; தவணைப்படி பாசனத்துக்கு விடப்படும் நீர் .
|
|
அறநூல்
|
நீதி கூறும் நூல் .
|
|
அறநெறி
|
அறவழி .
|
|
அறப்பரிகாரம்
|
துறந்தோர் முதலியவர்க்குச் செய்யும் பணிவிடை .
|
|
அறப்பரிசாரம்
|
துறந்தோர் முதலியவர்க்குச் செய்யும் பணிவிடை .
|
|
அறப்பாடல்
|
கேடு விளைக்கும் சொற்பயிலும் பாட்டு .
|
|
அறப்பாடுபடுதல்
|
பாடுபட்டு வேலை செய்தல் .
|
|
அறப்பார்த்தல்
|
தீர ஆராய்தல் ; அழிக்க வழி தேடுதல் .
|
|
அறப்புறங்காவல்
|
அறத்திற்கு விடப்பட்ட நிலங்களைப் பாதுகாக்கை .
|
|
அறப்புறம்
|
பாவம் ; அறத்துக்கு விடப்பட்ட இறையிலி நிலம் ; அறச்சாலை ; வேதம் ஓதும் பள்ளி .
|
|
அறப்போர்
|
அறவழியில் செய்யும் கிளர்ச்சி .
|
|
அறம்
|
தருமம் ; புண்ணியம் ; அறச்சாலை ; தரும தேவதை ; யமன் ; தகுதியானது ; சமயம் ; ஞானம் ; நோன்பு ; இதம் ; இன்பம் ; தீப்பயன் உண்டாக்கும் சொல் .
|
|
அறம்பகர்ந்தோன்
|
புத்தன் .
|
|
அறம்பாடுதல்
|
தீச்சொற்பட்டுத் தீப்பயன் உண்டாகப் பாடுதல் ; வசைக்கவி பாடுதல் .
|
|
அறல்
|
அறுகை ; அறுத்துச் செல்லும் நீர் ; அரித்தோடுகை ; நீர் ; சிறுதூறு ; நுண்மணல் ; கருமணல் ; நீர்த்திரை ; மயிர் நெறிப்பு ; கொற்றான் ; திருமணம் ; விழா .
|
|
அறவன்
|
தருமவான் ; கடவுள் ; புத்தன் ; முனிவன் ; அறத்தைக் கூறுவோன் ; பார்ப்பனன் .
|
|
அறவாணன்
|
கடவுள் .
|
|
அறவாய்போதல்
|
காண்க : அறுவாய்போதல் .
|
|
அறவாழி
|
தருமசக்கரம் ; அறக்கடல் .
|
|
அறவாளன்
|
தருமவான் ;
|
|
அறவி
|
அறம் ; புண்ணியத்தோடு கூடியது ; பெண்துறவி ; பொதுவிடம் .
|
|
அறவிடுதல்
|
முற்றும் நீக்குதல் ; விற்றல் .
|
|
அறவிய
|
அறத்தோடுகூடிய .
|
|
அறவியங்கிழவோன்
|
புத்தன் .
|
|
அறவியான்
|
அறத்தில் நிற்பவன் .
|
|
அறவிலை
|
முழுமையும் விலைப்படுதல் .
|
|
அறவிலை வாணிகன்
|
பொருளை விலையாகக் கொடுத்து அறம் கொள்வோன் .
|
|
அறவினை
|
நற்செயல் .
|
|
அறவு
|
ஒழிகை .
|