| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
அறச்செட்டு
|
கடுஞ்செட்டு .
|
|
அறச்செல்வி
|
தருமதேவதை ; உமாதேவி .
|
|
அறச்சோலை
|
கோயினுட்சோலை .
|
|
அறசம்
|
கத்தரி .
|
|
அறசோகணக்கு
|
காட்டுக்கருணை ; கருணைக்கிழங்கு .
|
|
அற்பசங்கை
|
சிறுநீருக்குப் போகை .
|
|
அற்பசி
|
காண்க : ஐப்பசி ; அசுவினி .
|
|
அற்பத்தனம்
|
இழிகுணம் .
|
|
அற்பத்திரம்
|
துளசி ; திருநீற்றுப்பச்சை .
|
|
அற்பபத்திரம்
|
துளசி ; திருநீற்றுப்பச்சை .
|
|
அற்பதுமம்
|
செந்தாமரை .
|
|
அற்பபதுமம்
|
செந்தாமரை .
|
|
அற்பம்
|
சிறுமை ; இழிவு ; இலேசு ; நாய் ; பஞ்சு ; புகை .
|
|
அற்பமாரி
|
சிறுகீரை .
|
|
அற்பமாரிடம்
|
சிறுகீரை .
|
|
அற்பர்
|
கீழ்மக்கள் .
|
|
அற்பரம்
|
மக்கட் படுக்கை .
|
|
அற்பருத்தம்
|
வாழை .
|
|
அற்பாசனம்
|
மூத்திரம் பெய்கை .
|
|
அற்பாசமனம்
|
மூத்திரம் பெய்கை .
|
|
அற்பாயு
|
குறைந்த வாழ்நாள் .
|
|
அற்பாயுசு
|
குறைந்த வாழ்நாள் .
|
|
அற்பாயுள்
|
குறைந்த வாழ்நாள் .
|
|
அற்புத்தளை
|
அன்புப் பிணைப்பு .
|
|
அற்புதக்கண்
|
அபிநயக் கண்வகை .
|
|
அற்புதம்
|
ஒன்பான் சுவையுள் ஒன்று ; வியப்பு ; அறிவு ; அழகு ; சூனியம் ; ஆயிரங்கோடி ; சிதம்பரம் ; தசைக்கணு .
|
|
அற்புதமூர்த்தி
|
கடவுள் .
|
|
அற்புதவாதம்
|
இசிவுநோய்வகை .
|
|
அற்புதவாயு
|
இசிவுநோய்வகை .
|
|
அற்புதன்
|
கடவுள் ; கம்மாளன் ; புதியது புனைவோன் ; கண்ணாளன் .
|
|
அற்றகாரியம்
|
தீர்ந்த பொருள் ; முடிந்த வேலை .
|
|
அற்றகுற்றம்
|
இழப்பு .
|
|
அற்றப்படுதல்
|
கவனத்தின் இடையறவுபடுதல் ; இல்லாமையாதல் .
|
|
அற்றபேச்சு
|
முடிவான பேச்சு .
|
|
அற்றம்
|
அழிவு ; துன்பம் ; இறுதி ; சோர்வு ; வறுமை ; இடைவிடுகை ; அவகாசம் ; அவமானம் ; அறுதி ; விலகுகை ; சுற்று ; மறைக்கத்தக்கது ; நாய் ; பொய் ; உண்மை .
|
|
அற்றவன்
|
பற்றற்றவன் ; பொருளற்றவன் .
|
|
அற்றார்
|
பொருள் இல்லாதவர் ; முனிவர் .
|
|
அற்று
|
அத் தன்மையது ; அதுபோன்றது ; ஓர் உவம உருபு ; ஒரு சாரியை .
|
|
அற்றுப்போதல்
|
முழுதும் ஒழிதல் ; இடைமுறிதல் ; முழுதும் கைவருதல் .
|
|
அற்றூரம்
|
காண்க : மரமஞ்சள் .
|
|
அற்றேல்
|
அப்படியானால் .
|
|
அற்றை
|
அந்நாட்குரிய ; அன்றன்றைக்குரிய ; அற்பமான .
|
|
அற்றைக்கூலி
|
நாட்கூலி .
|
|
அற்றைக்கொத்து
|
நாள்தோறும் தானியமாகக் கொடுக்கும் கூலி .
|
|
அற்றைநாள்
|
அன்று ; அந்த நாள் .
|
|
அற்றைப்படி
|
நாள்தோறும் உணவுக்காக அளிக்கும் பண்டம் அல்லது பணம் .
|
|
அற்றைப்பரிசம்
|
விலைமாதர் அன்றன்று பெறும் கூலி .
|
|
அற்றைப்பிழைப்பு
|
அன்றன்று செய்யும் சீவனம் ; அன்றாடங்காய்ச்சி .
|
|
அற
|
முழுவதும் ; மிகவும் ; தெளிவாக ; செவ்வையாக .
|
|
அறக்கட்டளை
|
நிலைபெற்ற அறச்செயல்கள் நடப்பதற்காக ஒதுக்கப்பெறும் மானியம் முதலியன .
|
|
அறக்கடவுள்
|
யமன் ; தருமதேவதை .
|
|
அறக்கடை
|
பாவம் .
|
|
அறக்கப்பறக்க
|
விழுந்து விழுந்து ; விரைவாக .
|
|
அறக்கப்பாலை
|
திருநாமப்பாலை .
|
|
அறக்கருணை
|
அனுக்கிரக ரூபமான அருள் .
|
|
அறக்கழிவு
|
அறநெறிக்கு மாறுபட்ட செயல் .
|
|
அறக்களவழி
|
வேளாண் தொழிலைக் கூறும் புறத்துறை .
|
|
அறக்களவேள்வி
|
வேள்விச்செயல் .
|
|
அறக்கற்பு
|
அமைதிநிலை பொருந்திய கற்பு .
|
|
அறக்காடு
|
சுடுகாடு .
|
|
அறக்குளாமீன்
|
சூரைமீன் .
|
|
அறக்கூர்மை
|
மிக்க கூர் .
|
|
அறக்கூழ்ச்சாலை
|
அன்னசத்திரம் ; கஞ்சிமடம் .
|
|
அறக்கொடி
|
பார்வதி ; உமை .
|
|
அறக்கொடிபாகன்
|
சிவன் .
|
|
அறங்கடை
|
பாவம் .
|
|
அறன்கடை
|
பாவம் .
|
|
அறங்காவல்
|
கோயில் சைத்தியம் முதலாயின காக்கும் தொழில் ; நற்பொறுப்பு .
|
|
அறங்கூறவையம்
|
நீதிமன்றம் .
|
|
அறச்சாலாபோகம்
|
அறச்சாலைகளுக்கு விட்ட மானியம் .
|
|
அறச்சாலை
|
தருமசாலை .
|
|
அற்கி
|
காண்க : ஓரிலைத்தாமரை .
|
|
அற்குதல்
|
நிலைபெறுதல் ; தங்குதல் .
|
|
அற்சிரம்
|
காண்க : அச்சிரம் .
|
|
அற்சிரை
|
காண்க : அச்சிரம் .
|
|
அற்பக்கியன்
|
சிற்றறிவுடையவன் .
|
|
அற்பகதன்
|
வாழை .
|
|
அற்பகந்தம்
|
காண்க : செந்தாமரை .
|
|
அற்பகேசி
|
காண்க : வசம்பு .
|